Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎப் இல் பணம் எடுக்க வேண்டுமா? இதை எல்லாம் செஞ்சா, சிக்கல் இல்லாமல் பணம் கைக்கு வரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎப் இல் பணம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, அதற்கு epfo இணையதளத்தில் இதை எல்லாம் சரியாக செய்து இருந்தால் உங்களுக்கு சிக்கல் இல்லாமல் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும். பிஎப் கணக்கில் சிக்கல் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

மாத சம்பளம் வாங்குவோருக்கு ஏதேனும் ஒரு சிக்கல் வந்தால், அவர்கள் கைவைக்க விரும்பும் இடம் என்றால் அது பிஎப் பணம் தான். பொதுவாக பிஎப் கணக்கில் பணம் எடுக்க வேண்டாம் என்பது பலரது அறிவுரை.

Want to withdraw money in PF? If you do all this, you will get money without any problem

ஹெச்ஆர்கள் பலர் கூறிய அறிவுரை என்ன வென்றால், பிஎப் பணத்தை எடுக்காமல் வயதான காலம் வரை வைத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய தொகை உங்கள் கணக்கில் இருக்கும். அதை வைத்து உங்கள் வயதான காலத்தை சிறப்பாக அனுபவிக்கலாம். அப்போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, உயர்கல்விக்கு பயன்படும் என்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், கையில் எந்த சேமிப்பும் இல்லாத போது, கடைசியில் பிஎப் பணத்தை தான் எடுக்க வேண்டிய நிலைக்கு மாத சம்பளம் வாங்குவோர் ஆளாகிறார்கள். அவர்கள் பிஎப் அட்வான்ஸ் முறையில் பணம் எடுக்கலாம்.

உங்கள் கணக்கில் உள்ள தொகையில் பாதியை பிஎப் அட்வான்ஸ் முறையில் உயர்கல்வி, உடல்நிலை பாதிப்பு போன்ற காரணத்திற்காக எடுக்கலாம்.
epfo இணையதளத்தில் பணம் எடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் https://www.epfindia.gov.in/ இணையதளத்திற்குள் செல்லுங்கள். அதில் சர்வீஸ் என்று இருக்கும் முதல் ஆப்சனில் எம்ப்ளாயி என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Member UAN/Online Service (OCS/OTCP) என்று ஆப்சன் கீழே காட்டும். அதனை கிளிக் செய்தால் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளம் ஓபன் ஆகும்.

அதில் உங்கள் யுஏஎண் நம்பர், அதற்கு கீழ் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் அதில் உள்ள கேப்சியாவை நிரப்ப வேண்டாம். பாஸ்வேர்டு மறந்துவிட்டால், பாஸ்வேர்டு மறந்துவிட்டதற்கான ஆப்சனை கிளிக் செய்து ரீசெட் செய்து ஓபன் செய்யலாம்.

லாகின் செய்து உள்ளே சென்ற உடன் அதில் கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் ஆன்லைன் சர்வீஸ் என்ற ஆப்சனில் ONLINE CLAIM (FORM 31,19,10C & 10D) என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்கும். அதனை செய்த பின்னர் என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். அதற்கும் ஆப்சன் காட்டும் . அதை முடித்துவிட்டு எவ்வளவு பணம் என்பதை குறிப்பிடுங்கள்.

உங்கள் கணக்கில் உள்ள பணத்தில் பாதியை பெற முடியும். அதற்கு மேல் போடாதீர்கள். அதன்பிறகு நீங்கள் கொடுத்த வங்கி கணக்கு எண்ணின் செக் லீப் ஒன்றினை பென்சிலால் ஒரு முறை அடித்து,. அதனை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்யுங்கள். இறுதியாக உங்கள் முகவரியை டைப் செய்யுங்கள். அதன்பிறகு உங்கள் ஆதாரை ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அந்த ஒடிபியை டைப் செய்து சப்மிட் கொடுங்கள். இப்போது உங்கள் கோரிக்கை பிராசஸில் உள்ளதாக குறிப்பிடுவார்கள். உங்கள் கோரிக்கை 15 முதல் 20 நாட்களில் நிறைவேறி பணம் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும்.

அதேநேரம் பிஎப் கணக்கில் பணம் எடுக்கும் முன்பு செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. நீங்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளீர்கள் என்றால், அந்த கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் தற்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள். அப்படி செய்தால் மட்டுமே பணம்கிடைக்கும். மாறாக வேறுவேறு கணக்கில் பணம் இருந்தால் கிடைக்காது. அதேபோல் ஏற்கனவே நீங்கள் பணியாற்றிய நிறுவனம், நீங்கள்வேலையை விட்டு அந்த நிறுவனத்தில் நின்ற தேதியை குறிப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அதையும் செய்ய வையுங்கள். இதெல்லாம் சரியாக இருந்தால் பிஎப் அட்வான்ஸ் பணம் உங்கள் கைக்கு 15 நாட்களில் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+