Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டில் வெளுக்கும் மழை.. தமிழ்நாட்டில் நேர்மாறான கிளைமேட்.. தலைநகர் சென்னையில் வானிலை எப்படி

Subscribe to Oneindia Tamil

பெய்து வந்தாலும் கூட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வறண்ட ஒரு வானிலையே நிலவி வருகிறது. இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாகத் தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மழை மிக மோசமாக இருந்தது.

இதனால் அம்மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழ்நாட்டில் அதற்கு நேர்மாறான வானிலையே இருந்து வருகிறது. பல இடங்களில் வெப்பம் கோடைக் காலத்தைப் போல வெப்பம் சில நாட்களாக உயர்ந்துள்ளது.

Warm weather to continue in sate says Chennai meteorological department

வானிலை: வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை வங்காளதேசம் கடற்கரையைக் கடந்தது.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை.

Warm weather to continue in sate says Chennai meteorological department

எச்சரிக்கை: மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரைத் தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு- மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல நாளைய தினம் மத்திய வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+