Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’இறைவனின் தீர்ப்பு’ பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.. ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப் டைமிங் ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் தனத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதியன்று நிறைவடைந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது.

ஓபிஎஸ் வாதம்

ஓபிஎஸ் வாதம்

அதேபோல் மார்ச் 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து ஓபிஎஸை நீக்கியுள்ளனர்.

 பொதுச்செயலாளர் தேர்தல்

பொதுச்செயலாளர் தேர்தல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

 எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை

எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அத்துமீறி நடந்திருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

தீர்ப்பு எப்போது?

தீர்ப்பு எப்போது?

அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாளை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் மகன் ட்வீட்

ஓபிஎஸ் மகன் ட்வீட்

இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து,
சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே...

இறைவனின் தீர்ப்புக்காக

இறைவனின் தீர்ப்புக்காக

தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.. கடை கோடி உண்மை தொண்டன் என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+