டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது.. மடியில் கனமில்லை.. பார்ட் 10 வந்தாலும் பயமில்லை.. சேகர்பாபு
சென்னை: எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்றைய தினம் சென்னை பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை கட்டிடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, 2021 - 2022ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் மலைக் கோயில்கள் மற்றும் பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்ற திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கிடும் வகையில் 10 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த ஆண்டிலேயே 10 மருத்துவ மையங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.

அதனை தொடர்ந்து 2022 - 2023 ஆம் ஆண்டில் 5 மருத்துவ மையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன. இதுவரையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோயில்களில் 15 மருத்துவ மையங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. 2023 -2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் புதிதாக 2 மருத்துவ மையங்களை அறிவித்திருக்கின்றோம். ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், சென்னை, தம்புச்செட்டித் தெருவில் திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட இடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கின்ற சுமார் 2,652 சதுரடி பரப்பளவு கொண்ட இடமானது திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அவர்களால் மருத்துவமனை அமைப்பதற்காக உயில் எழுதி வைக்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இங்கு மருத்துவமனையை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த இடத்தினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 13-க்கும் மேற்பட்ட வணிக கடைகளாக பிரித்து மேல் வாடகைக்கு விட்டிருந்தார். சென்னை மண்டல இணை ஆணையர் அவர்களால் சட்டப்பிரிவு 78 - இன் படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புதாரர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, சாமுண்டீஸ்வரி அம்மாள் உயிலாக எழுதி வைத்த இடத்தில் மீண்டும் மருத்துவமனை அமைத்திட உள்ளோம் என தெரிவித்தவுடன், எதிர் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்து இந்து சமய அறநிலையத்துறை வசமே இடத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் காளிகாம்பாள் திருக்கோயில் மற்றும் கந்தக்கோட்டம் திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், இதுவரை ரூ.4,874 கோடி மதிப்பீட்டிலான 5,273 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.
ஆளுநரை சந்தித்து அண்ணாமலை அளித்த புகார் மனுக்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,
அண்ணாமலை கூறியிருக்கின்ற புகார்கள் எவை எவை என்று தெரிந்த பிறகு அதற்கு முழுவதுமாக பதில் சொல்ல திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கின்றது. எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை அவர்கள் உடலை சீராக வைத்துக் கொள்வதற்காகவோ, மருத்துவர்களின் ஆலோசனைபடியோ நடை பயணத்தை மேற்கொள்கிறாரோ? தெரியவில்லை. ஆனால் நடை பயணம் மட்டுமல்ல எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமையப் போகின்ற கூட்டணி தான் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் நடை பயணத்திற்கு வாழ்த்துகள் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல்












Click it and Unblock the Notifications