விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு பற்றிய கேள்வி.. டக்கென எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில்
சென்னை: இன்று அதிமுகவில் இறுதிக்கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பற்றி செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினமே தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் களம் அனல் பறக்கிறது. திமுக நேற்று தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதேபோல் அதிமுகவும் நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இறுதிகட்ட வேட்பாளரை அறிவித்தார். இன்று மொத்தம் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை: தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-
அதிமுகவிற்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. எம் ஜி ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்த போது எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய மறைவுக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை நடத்தியபோது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை சந்தித்தார் என்று தெரியும். இருவரும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து தான் வெற்றி பெற்றனர்.
சட்டரீதியாக எதிர்கொள்வோம்: இதேபோல் நாங்களும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த வெற்றியை பெறுவோம். நாங்கள் சட்ட ரீதியாக அனைத்தையும் சந்திப்போம். ஏற்கனவே மாநில அரசு லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக வழக்கு பதிவு செய்தார்கள்.. மத்திய அரசு வருமான வரித்துறை மூலமாக ரெய்டு நடத்தினார்கள். இப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. எல்லாவற்றையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
பெண்கள் விருப்பப்பட்டு கேட்டால் தொகுதிகளை வழங்குவோம். திருநெல்வேலியில் ஒதுக்கியிருக்கோம். மத ரீதியாக நடத்துகிற கட்சி கிடையாது. மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதமும் சமம். அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications