அடுத்த 2 நாட்கள்.. தமிழகத்தில் வெயில் சதத்தை தாண்ட போகிறது.. கவனம்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக அளவிற்கு வெப்பம் இருக்கும் இருக்கும், அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் தினமும் அதிகரிக்கிறது. நேற்று 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.
இன்றும் இந்த 9 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. முக்கியமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் சுமார் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பு இல்லை.
முக்கியமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாண்டி வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் , வட தமிழகம், மத்திய தமிழகத்தில்தான் வெயில் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
பல இடங்களில் அனல் காற்றுடன் கூடிய வெயில் அடிக்கும். இதனால் மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
மேற்கு மாவட்டங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.