Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை மறுநாள் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி.. நிபந்தனைகள் என்னென்ன? டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி சில இடங்களில் அனுமதி மறுத்தது. சில இடங்களில் சுற்றுசுவருக்குள் ஊர்வலம் நடத்த தனி நீதிபதி அமர்வு அனுமதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரித்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 27ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாடு காவல் துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக சில முக்கிய நிபந்தனைகளை அறிவுரைகளாக வழங்கி உள்ளார்.

அதன்படி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூறிய வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது. ஆர்எஸ்ஆர் ஊர்வலத்தில் கம்பு உள்பட எந்த ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றியும், மாற்று மதங்களை பற்றியும் பேச கூடாது.

What are the rules for April 16 RSS procession in Tamil Nadu, DGP Sylendra Babu advises, full list

பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்ல வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பாதையில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாருக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும்.

ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அதோடு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு ஊர்வலத்தை தலைமையேற்று நடத்துபவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களை தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+