பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி விவாதித்தது என்ன? போட்டுடைத்த அதிமுக கல்யாணசுந்தரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவாதித்தது என்ன என்பது தொடர்பாக அதிமுக நிர்வாகி கல்யாண சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். நிதி விவகாரங்களைக் காரணம் காட்டி திமுக வேண்டுமென்றே ஒரு கருத்தை உருவாக்கி வருவதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டம் வந்து விமான நிலைய விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த மோடி, இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இதனிடையே நேற்று திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

What Did EPS Discuss With PM Modi AIADMK s Kalyanasundaram Responds Sharply

நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர். பிரதமர் மோடியை வரவேற்க ஓபிஎஸ் தரப்பில் அனுமதி கோடி கடிதம் அனுப்பிய நிலையில், கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பை மட்டும் பிரதமர் மோடி சந்தித்தார்.

இதன்பின் கோர்டுயார்டு ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி கல்யாணசுந்தரம் பேசுகையில், பிரதமர் மோடியின் தமிழக பயணம் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் மீண்டும் நிலுவை நிதியைத் தாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்று கூட்டணியில் இருப்பதால், ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் கோரிக்கை வைப்பற்கும் நிறைவேற்றியதற்கும் இடையிலான இடைவெளி நீண்ட காலமாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கருணாநிதியும் இப்படிதான் நிதிக்காக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். மீனவர்கள் கொலை செய்யப்படும் போது காங்கிரஸ் ஆட்சியில் கடிதம் மட்டுமே எழுதினார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிதி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளின் ஆட்சியிலும் சிக்கல் இருப்பது உண்மை தான்.

அதிமுக ஆட்சியின் போது நிதியைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் நிதியை மட்டுமே பிரதானமாக ஒரு கோரிக்கையாக வைத்து அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக ஒரு கருத்தை உருவாக்கப் பார்க்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சந்தித்து வரவேற்றார். அங்கு அரசியல் ரீதியாகப் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+