சென்னை பல்லாவரம் பிரபல சைவ ஓட்டலில் நேற்று என்ன நடந்தது? சாம்பார் தந்தும் சாகடிக்கப்பட்ட சூப்பர்வைசர்
சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் கூடுதல் சாம்பார் கேட்டு, சூப்பர்வைசரை அடித்துக் கொன்ற தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.. தஞ்சையை சேர்ந்த சூப்பர்வைசர் அருணுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்திருந்தது.
மது போதையில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் சில சம்பவங்கள் அவர்களை மட்டுமல்ல.. அப்பாவிகளையும் மோசமாக பாதிக்கிறது. சென்னை மாநகரில் மதுபோதையில் ஓட்டலுக்கு வரும் சிலர், அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுவது அடிக்கடி நடக்கிறது. சில சமயங்களில் கொலையில் முடிகிறது.. அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் புகழ் பெற்ற தனியார் சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 30 வயதாகும் அருண் என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் பம்மல் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர் தன்னுடன் வேலை செய்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். அண்மையில் தான் அருணுக்கு திருமணம் நடந்திருந்தது..
இந்நிலையில் கடந்த திங்கள் அன்று இரவு அனகாபுத்தூர் பாரிநகர் லட்சுமி தெருவைச் சேர்ந்த 55 வயதாகும் சங்கர், அவரது மகன் அருண்குமார் (30) இருவரும் இந்த ஓட்டலுக்கு வந்து இட்லி பார்சல் வாங்கியிருக்கிறார்கள். அப்போது சங்கரும், அருண்குமாரும் முழுமையாக மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது..
இட்லி பார்சல் வாங்கிய சங்கரும் அவரது மகன் அருண்குமாரும் கூடுதலாக சாம்பார், சட்னி கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அவர்களை மேற்பார்வையாளர் அருண் சமாதானம் செய்து வைத்ததுடன், அவர்கள் கேட்டபடி கூடுதலாக சட்னி, சாம்பார் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த தந்தை-மகன் இருவரும், அங்கு வாகன நிறுத்தகத்தில் இருந்த தங்களது இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது ஓட்டல் காவலாளியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. மீண்டும் அங்கு வந்த அருண், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்.
மது போதையில் இருந்த தந்தை மகன் இருவரும், ஆத்திரம் அடைந்து, ஓட்டல் சூப்பர்வைசரான அருணை கைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்த அருண் எழுந்திருக்கவில்லை.. அவரை எழுப்ப முயற்சித்த சக ஊழியர்கள், முடியாத நிலையில், அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது தொடர்பாக உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கர், அவரது மகன் அருண்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கர் பெயிண்டராகவும், அருண்குமார் ஆர்.ஓ. குடிநீர் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.. குடிபோதையில் வந்த இவர்கள், சமீபத்தில் காதல் திருமணம் செய்த சூப்பர்வைசரை, சாம்பாருக்காக அடித்துக் கொலை செய்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications