புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு
Recommended Video
சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர். இருப்பினும் மக்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு இதயத்தில் இடம் கொடுத்துள்ளதை உணர முடிகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக, கூட்டணி, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவியது.
மக்கள் நீதி மய்யம் மையம் சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழ்நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர்.

வாக்குகள் குறைந்தன
பெரும்பாலான தொகுதிகளில் மநீம வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் டெபாசிட் வாங்குவதே சந்தேகமாக உள்ளது. ஆனால் இதை மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்ததுதான்.

கவனிப்புக்குரியது
அதேசமயம், மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைத்துள்ளதை உணர முடிகிறது. பல இடங்களில் இக்கட்சி 3வது இடத்தில் வந்துள்ளது. தேமுதிக போன்ற எஸ்டாபிளிஷ் ஆன கட்சிகளே திணறிய நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு இது முக்கியமானது.

அமமுக காலி
பல இடங்களில் அமமுகவுக்கு இது கடும் போட்டியைக் கொடுத்துள்ளது. முட்டி மோதி அந்தக் கட்சியை சில இடங்களில் பின்னுக்கும் தள்ளியுள்ளது. இது ஆச்சரியகரமானது.

கமீலா தோல்வி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கமீலா நாசர் கூட பின்னடைவையே சந்தித்துள்ளார். அதேபோல், இடைதேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் பின்தங்கியே இருக்கிறது.

பெட்டர் லக்
தேர்தல் முடிவு மக்கள் நீதி மய்யத்துக்கு எதிராகவே இருந்தாலும் கூட வாக்காளர்கள் அந்தக் கட்சியை முழுமையாக கைவிடவில்லை, நல்ல பயிற்சியுடன் திரும்பினால் வரும் காலம் கமலுக்குரியதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications