பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் ? தாயார் அற்புதம்மாள் போட்டுடைத்த தகவல்!
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்றை அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்.
31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இப்போது தனது மனதுக்கு பிடித்த காரியங்களை செய்யத் தொடங்கியுள்ளார்.
இத்தனை நாட்களாக வெறுமனே புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்த
பேரறிவாளன், இப்போது கிட்டார் வாசித்து தனது இசை ஆர்வத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளாராம்.

விசிக தலைவர்
ரஷ்யாவுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று காலை தான் சென்னை திரும்பினார். இந்த
தகவல் ஏற்கனவே நேரம் கேட்டிருந்த பேரறிவாளனுக்கு விசிக அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நண்பகல் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும்
நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கிட்டார் வாசிப்பு
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளன் விடுதலைக்காக திருமாவளவன் எந்தளவு தனக்கு பக்கபலமாக இருந்தார் என்பதை விவரித்தார். மேலும் பேரறிவாளனுக்கு திருமா கிட்டார் இசைக்கருவி ஒன்றை ஏற்கனவே பரிசாக கொடுத்திருப்பதாகவும் அந்த கிட்டாரை தான் இப்போது பேரறிவாளன் வாசித்து வருவதாகவும் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். மகனின் இசை
ஆர்வத்தை குறிப்பிட்டு பெருமைப்பட்டார்

யாருக்கும் தெரியாது
பேரறிவாளனுக்கு இசையின் மீது இந்தளவு ஆர்வம் இருப்பதும் அவர் கிட்டார் வாசிப்பதும் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்நிலையில் அந்த தகவலை செய்தியாளர் சந்திப்பின் போது போட்டுடைத்துவிட்டார் அற்புதம்மாள்.இறுக்கமான சூழலை கூட இசையால் மாற்ற முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அறம் காத்த அன்னை எனக்
கூறி பாராட்டினார் திருமாவளவன்.

எல்லா தலைவர்களையும்
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது முதல் முதலமைச்சர் ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமா,
என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களை பேரறிவாளனும் அவரது தாயாரும் நேரில்
சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications