டிஜிட்டல் ஹவுஸ் திட்டம்.. சட்டப்பேரவையில் இன்று அறிமுகம்.. எம்எல்ஏக்களுக்கு என்ன நன்மை>?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் மின்னணுப் புத்தகம் என்ற ஆப் நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை அவர்களின் இருக்கை கணினியிலேயே பார்க்க முடியும்.

கணினி யுகத்தை அடுத்து தற்போது ஆண்ட்ராய்டு யுகமாக தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு சட்டப்பேரவையும் ஆண்ட்ராய்டு யுகத்திற்கு மாறி விட்டது. முன்பு சட்டப்பேரவையில் பட்ஜெட் உள்பட அனைத்து கேள்வி பதில்களும் காகித வடிவில் தான் தரப்படும்.
மின்னணு வடிவில் உள்ள இதைக் காண சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்போது காகிதமில்லா சட்டப்பேரவை என்ற நிலையை தமிழக சட்டப்பேரவை எட்டி உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இ- பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்து வருகிறார. பேரவையில் காகிதச் செலவு பெரிய அளவில் மிச்சமாகி வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் இ - புக் என்ற செயலி நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கேள்வி கேட்கும் உறுப்பினர்கள், பதில் சொல்லும் உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இனி மின்னணு முறையிலேயே பார்க்க முடியும். இந்த அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications