மண்ணைக் கவ்விய அதிமுக.. அதிர்ச்சியில் தலைவர்கள்.. சறுக்கியது எங்கே?.. இனி நிமிர இதுதான் வழி!
சென்னை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற தேர்தலில் அதிமுக பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் வார்டுகளிலேயே கட்சி தோல்வி அடைந்துள்ளதால் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் சரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுக பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் , சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில பாஜகவுடன அதிமுக கூட்டணி அமைத்தது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டும் இத்தனை சறுக்கல் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகராட்சி வார்டு
மொததம் உள்ள 1374 மாநகராட்சி வார்டுகளில் ஒரு வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, 4 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு இடங்கள் போக மற்ற 1369 வார்டுகளில் திமுக 952 வார்டுகளிலும் அதிமுக 164 வார்டுகளிலும் வென்றுள்ளது. அதாவது திமுக வென்றதில் 50 சதவீதம் வெற்றியை கூட அதிமுக தொடவில்லை. அது போல் மொத்தம் உள்ள 3843 நகராட்சி வார்டுகளில் ஒரு வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, போட்டியின்றி 18 இடங்களில் தேர்வு போக மற்ற 3824 வார்டுகளில் திமுக 2360 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக வெறும் 638 இடங்களில்தான் வென்றுள்ளது.

பேரூராட்சி வார்டு
அது போல் மொத்தமுள்ள7621 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் தேரதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளில் தேர்தல் ரத்தாகியுள்ளது. போட்டியின்றி 196 வார்டுகளில் தேர்வு போக மீதமுள்ள 7407 வார்டுகளில் திமுக 4388 வார்டுகளிலும் அதிமுக 1206 வார்டுகளிலும் வென்றுள்ளது. திமுக வெற்றிக்கும் அதிமுக வெற்றிக்கும் மிக அதிக இடைவெளி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வசிக்கும் வார்டுகளில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளதால் தலைவர்களை போல் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். சோர்ந்து போயுள்ள அதிமுக தொண்டர்களுக்கு தைரியம் சொல்லும் வகையில் அதிமுக தலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Recommended Video

வலுப்படுத்த வேண்டும்
ஆறுதல், தேற்றுதலுக்கு பிறகு அதிமுகவுக்கு தேவையான சுய பரிசோதனை. அதிமுகவை வலுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை திட்டமிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால் இப்போதே தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தேர்வு, கட்சி நியமன பதவிகளில் வேண்டியவர், வேண்டாதவர்கள் என்றில்லாமல் கட்சி விதிகளை பின்பற்றி நடத்தல் வேண்டும். நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி எங்கே சறுக்கினோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி கட்சியை பகைத்து கொள்ளாமல் இருக்க மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக துணை போனதும் இந்த சறுக்கலுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தொண்டர்களின் கோரிக்கைக்கிணங்க, ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான வழிகளை சண்டை சச்சரவின்றி செய்ய வேண்டும். அதிமுக ஒன்றிணையும் போது அண்ணன் தம்பிகளுக்குள் ஆயிரம் சண்டை வரும் போகும் என்றார்கள் அல்லவா, அது போல் ஒற்றுமையுடன் செயல்பட்டு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. இதையெல்லாம் செய்தால் இனி வரும் தேர்தலிலாவது தப்பலாம், இல்லாவிட்டால் கட்சி கரைய தொடங்கிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications