5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன தவறு? முதல்வர் பழனிச்சாமி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லது சொன்னால் யாரும் கேட்பதில்லை, 5ம் வகுபபு மற்றும 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு பல்வேறு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாக அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை ) கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதத்தில் திமுக எம்எல்ஏ பொன்முடி பேசுகையில், 5, 8-ம் வகுப்பிற்கு முதலில் கட்டாயத்தேர்வு என அறிவிக்க வேண்டும்? திமுக எதிர்ப்பு தெரிவித்ததும் ஏன் அந்த நிலைப்பாட்டி இருந்து ஏன் பின்வாங்க வேண்டும்? என்று கேட்டார்.

முதல்வர் அதிரடி கேள்வி

முதல்வர் அதிரடி கேள்வி

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசுகையில், நல்லது சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன தவறு? நல்ல எண்ணத்தில் தான் 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வைக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் கட்டாயத்தேர்வை ரத்து செய்து உள்ளோம் திமுக எதிர்ப்பு தெரிவித்தற்காக பின்வாங்கவில்லை.

கல்வி தரம் உயரும்

கல்வி தரம் உயரும்

5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதினால் தான் மாணவர்களுக்கு பதற்றம் இல்லாமல் போகும். அதன்பிறகு 10-ம் வகுப்பு தேர்வை பதற்றம் இல்லாமல் எழுத முடியும். விஞ்ஞான காலத்தில் நாம் உள்ளோம். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தினால் தான் உலக அளவிலான கல்வியைப் பெறுவதற்கு முடியும். எனவே தான் பொதுத்தேர்வைக் கொண்டு வந்தோம்.

போட்டித் தேர்வுகள்

போட்டித் தேர்வுகள்

கிராமப்புற மாணவர்கள் அறிவை வளர்த்து, போட்டித்தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதற்காகத்தான் 5, 8-ம் வகுப்புக்கு தேர்வு அறிவித்தோம். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெறத்தான் பொதுத்தேர்வை அறிவித்தோம். தேர்வால் மாணவர்களின் தரம் உயரும். தேர்வு இல்லாததால் மாணவர்களின் தரம், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால், தேர்வால் பாதிப்பு என எதிர்கட்சியினர் ஒரு பொய்யை சொல்லி அதை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.

பொன்முடி பதிலடி

பொன்முடி பதிலடி

இதையடுத்துது பேசிய பொன்முடி, தேர்வின் மூலம் கல்வித்தரம் உயராது 2011-12ம் ஆண்டில் NAS suveryயில் தமிழகத்தின் கல்வித்தரம் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த ஆய்வில் தமிழகம் கல்வித்தரத்தில் 8வது இடத்தில் இருக்கிறது. தேர்வு வைப்பது தான் கல்வித்தரமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனே எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்களைப் போராட்டக்களத்தில் எதிர்கட்சியினர் இறக்கி விடுகிறீர்கள். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+