Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும் "மாற்றம்".. ரோஹித் சர்மா எடுத்த அஸ்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இன்று நடக்க உள்ள மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரபரப்பான தென்னாபிரிக்கா - இந்தியா இடையிலான டி 20 தொடர் இன்று முடிவிற்கு வருகிறது. இன்று மாலை 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே வென்றுவிட்டது. தொடரை வென்ற நிலையில், மொத்தமாக தென்னாப்பிரிக்காவை வாஷ் அவுட் செய்யும் விதமாக இன்றும் வெற்றிபெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

கோலி

கோலி

இன்று இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி கோலி இன்று நடக்கும் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு இன்று ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் கே. எல் ராகுல் இன்று ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கும் இன்று ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓப்பனிங் இணை இந்திய அணியில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இன்று சூர்யா குமார் யாதவ் அல்லது பண்ட் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் இறங்க வாய்ப்புகள் உள்ளன. ஷ்ரேயாஸ் ஐயர் இன்று கோலிக்கு பதிலாக அணியில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக மாறலாம். அதன்படி ரோஹித், பண்ட், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன.

 தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

இது போக இந்திய அணியில் பவுலிங்கில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. அதன்படி சிராஜ் இன்று களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அல்லது ஹர்ஷல் பட்டேலுக்கு இன்று ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் பவுலிங் ஆர்டரிலும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. அர்ஷிதீப் சிங், அக்சர் பட்டேல், தீபக் சாகர், முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆட வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய அணி

இன்றைய அணி

இதனால் இன்று ஆடும் அணியில் ரோஹித், பண்ட், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அர்ஷிதீப் சிங், அக்சர் பட்டேல், தீபக் சாகர், அஸ்வின், ஹூடா, முகமது சிராஜ் ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. கே. எல் ராகுல் ஆடும் பட்சத்தில் ஹுடா அணியில் இருந்து நீக்கப்படலாம். தொடர்ந்து வீரர்கள் பலர் ஆடி வருவதால் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இன்று பலருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+