3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தோல்வி அடையும் பட்சத்தில் 7 முக்கியமான விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது,

தீர்ப்பு

தீர்ப்பு

தற்போது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கில் ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இரண்டும் முக்கியமான வாதங்களை வைத்துள்ளன. பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது. அதே சமயம் கட்சியில் எல்லாம் சட்டபடியே நடக்கிறது. பொதுக்குழுவும் சட்டப்படியே நடந்தது என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்துள்ளது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இந்த வழக்கில் ஓபிஎஸ் தோல்வி அடையும் பட்சத்தில் பின்வரும் 3 விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

ட்விஸ்ட் 1 - ஓபிஎஸ் வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இரட்டை நீதிபதி அமர்விற்கு இது செல்லும். பின்னர் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

ட்விஸ்ட் 2 - சட்ட ரீதியாக வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஓபிஎஸ் வெளிப்படையாக சசிகலாவுடன் ஐக்கியம் ஆக வாய்ப்பு உள்ளது. சசிகலா - டிடிவி தினகரனுடன் ஓ பன்னீர்செல்வம் ஐக்கியம் ஆகி சமூக ரீதியாக கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

ட்விஸ்ட் 3 - இது போக ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை திரட்டிக்கொண்டு புதிய கட்சி அல்லது அமைப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில் எடப்பாடி வெற்றிபெறும் பட்சத்தில் பின் வரும் 4 விஷயங்கள் கட்சிக்குள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

விஷயம் 1 - அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமார் நியமனம் செய்யப்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை சபாநாயகருக்கு ஏற்படும்.

விஷயம் 2 - ஓபி ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று எடப்பாடி தரப்பு அனுப்பிய கடிதம் செல்லுபடியாகும் நிலை ஏற்படும்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

விஷயம் 3 - அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் எடப்பாடி தரப்பிடம் தொடரும்.

விஷயம் 4 - அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இந்த 7 விஷயங்கள்தான் வரும் நாட்களில் அதிமுகவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும். இந்த வழக்கில் வரும் வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+