Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது.. பள்ளி திறப்பு எப்போது.. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிவடைய இருப்பதால், அவர்களுக்கு 25-ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்பது குறித்தும், பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.

ஏப்ரல் மாதத்தில் 17 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவடைந்ததும், கோடை விடுமுறை பள்ளிகளுக்கு எப்போது விடப்படும்? என்பது குறித்த அறிவிப்பை தொடக்கக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

When is the summer vacation for schools in Tamil Nadu and when will the school reopen

கோடை விடுமுறை

அந்த சுற்றறிக்கையில் தொடக்கக் கல்வித் துறை கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 11-ந்தேதி தேர்வு நிறைவு பெற்றதால், அவர்களுக்கு 12-ந் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது.

தொடக்க பள்ளி மாணவர்கள்

4, 5-ம் வகுப்புகளுக்கு 17ஆம் தேதியுடன் (இன்று) தேர்வு முடிவடைய உள்ளது. அவர்களுக்கு 18-ஆம் தேதியில் (நாளை) இருந்து கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 24-ந்தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது. அந்த மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இது மாணவர்களுக்கான அறிவிப்பு ஆகும்.

ஆசிரியர்கள் வர வேண்டும்

ஆசிரியர்களை பொறுத்தவரையில், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் 30-ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும். இதுதவிர ஆண்டு இறுதித் தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற வேண்டும். ஏனெனில், மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் எமிஸ் இணையதளத்தில் மே 1-ந்தேதி முதல் கிடைப்பதற்கு மாநில மையம் வாயிலாக வழிவகை செய்யப்பட உள்ளது" இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30ம் தேதி வர வேண்டும்

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந்தேதியுடன் தேர்வு முடிவடைய இருக்கிறது. அவர்களுக்கு ஏப்ரல் 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. அதேபோல், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் வருகிற ஏப்ரல் 30-ந்தேதி வரை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? என்பது குறித்த தகவலை பள்ளிக்கல்வித் துறை பின்னர் தெரிவிக்கும் என்றும் மே மாதம் முதல் வாரத்தில் அதற்கு பதில் வரவாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கல்வித்துறை வட்டாரத்தில்...

ஜூனில் பள்ளிகள் திறப்பு

அதேநேரம் ஜூன் மாதம் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும், திறப்பு தேதி கோடை வெயிலை பொறுத்து மாறுபட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக ஜூன் 15க்கு பிறகே பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு எப்படி என்பது வெயிலை பொறுத்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+