பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது.. பள்ளி திறப்பு எப்போது.. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிவடைய இருப்பதால், அவர்களுக்கு 25-ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்பது குறித்தும், பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்தில் 17 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவடைந்ததும், கோடை விடுமுறை பள்ளிகளுக்கு எப்போது விடப்படும்? என்பது குறித்த அறிவிப்பை தொடக்கக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

கோடை விடுமுறை
அந்த சுற்றறிக்கையில் தொடக்கக் கல்வித் துறை கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 11-ந்தேதி தேர்வு நிறைவு பெற்றதால், அவர்களுக்கு 12-ந் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது.
தொடக்க பள்ளி மாணவர்கள்
4, 5-ம் வகுப்புகளுக்கு 17ஆம் தேதியுடன் (இன்று) தேர்வு முடிவடைய உள்ளது. அவர்களுக்கு 18-ஆம் தேதியில் (நாளை) இருந்து கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 24-ந்தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது. அந்த மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இது மாணவர்களுக்கான அறிவிப்பு ஆகும்.
ஆசிரியர்கள் வர வேண்டும்
ஆசிரியர்களை பொறுத்தவரையில், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் 30-ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும். இதுதவிர ஆண்டு இறுதித் தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற வேண்டும். ஏனெனில், மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் எமிஸ் இணையதளத்தில் மே 1-ந்தேதி முதல் கிடைப்பதற்கு மாநில மையம் வாயிலாக வழிவகை செய்யப்பட உள்ளது" இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி வர வேண்டும்
தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந்தேதியுடன் தேர்வு முடிவடைய இருக்கிறது. அவர்களுக்கு ஏப்ரல் 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. அதேபோல், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் வருகிற ஏப்ரல் 30-ந்தேதி வரை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? என்பது குறித்த தகவலை பள்ளிக்கல்வித் துறை பின்னர் தெரிவிக்கும் என்றும் மே மாதம் முதல் வாரத்தில் அதற்கு பதில் வரவாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கல்வித்துறை வட்டாரத்தில்...
ஜூனில் பள்ளிகள் திறப்பு
அதேநேரம் ஜூன் மாதம் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும், திறப்பு தேதி கோடை வெயிலை பொறுத்து மாறுபட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக ஜூன் 15க்கு பிறகே பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு எப்படி என்பது வெயிலை பொறுத்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications