Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூரிப்பில் பூந்தமல்லி.. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் திருப்புமுனை.. ரெடியாக இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் திருப்புமுனையான விஷயம் நடக்க போகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில், பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் பாதை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்டமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் (தேனாம்பேட்டை வழி) வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் (கோயம்பேடு, திருமங்கலம்) இரண்டு வழித்தடங்களில் 55 கிமீ தூரத்திற்கு ஓடுகிறது. முதற்கட்ட மெட்ரோ ரயிலுக்கு சென்னை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள். மாதம் ஒரு கோடிபேர் அளவிற்கு சென்னை மெட்ரோ வளர்ந்துள்ளது.

Chennai Metro train

இந்நிலையில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (மெரினா வழியாக) (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (மேடவாக்கம் வழியாக) (44.6கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் போரூர் முதல் பூந்தமல்லி வரை பணிகள் வேகமெடுத்துள்ளது. போரூர் முதல் பூந்தமல்லி வரையில் உள்ள வழித்தடத்தில் குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.எனவே பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்டப் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் ஓடும் போது, வடபழனி வரையிலும் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக நீட்டிக்கவும் திட்டமிட்டுளளார்கள்.

இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிகளை வரும் 2027-ம் ஆண்டுக்குள் முடித்து முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் வழித்தடங்களில் 2027ம் ஆண்டு அல்லது 2028ம் ஆண்டுக்குள் முழுமையாக ரயில்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அனைத்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடும் என்று தெரிகிறது. அப்படி ஓடும் போது சென்னையின் எந்த இடத்திற்கும் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+