ரெடியாகும் பேப்பர்ஸ்! பல ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு.. இன்னும் வரப்போகும் மெசேஜ்.. அப்படி போடுங்க
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனேவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுவிட்டது, ஆனால் பல ஆயிரம் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இன்னும் உயரவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தமாக 93 ஆயிரம் போக்குவரத்து அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தனி கார்ப்பரேஷன் என்பதால் இன்னும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை. இந்த வருடத்திற்கான 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் போக்குவரத்து சங்கங்கள் சார்பாக அகவிலைப்படி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட இந்த கடிதத்தை அரசு ஆலேசனை செய்து வருகிறதாம். விரைவில் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது போக தமிழ்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை சேர்த்து வழங்கப்படும். அதன்படி நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையில் பணம் ஒரே கிளிக்கில் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னணு தீர்வு சேவை மூலம் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.
இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது.இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications