Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரெல்லாம் தேவர் சமுதாயம்? அரசாணையை அமல்படுத்தகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த மதுரை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என்று அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரிய தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தேவர் சமுதாயமும் ஒன்று. இந்த சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஸ்டாலின். வழக்கறிஞரான இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Who is Devar Community? Madurai High Court adjouned the verdict without mentioning date

கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் தேவர் சமுதாயம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணை என்பது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

மேலும் தேவர் சமுதாயம் என அழைக்கப்படாத நிலையில் கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர், மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இருக்கின்றனர். அதாவது ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. மனுதாரர் தரப்பில், கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமுதாயம் என்று அறிவித்த அரசாணை வெளியிட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்று முடிவடைந்ததன. இதையடுத்து நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+