செருப்பு கூட போடல.. பிரதமர் மோடிக்கு பணிவான வணக்கம்.. யார் இந்த துளசி?.. அரங்கை அதிர வைத்த பெண்
கர்நாடக மாநிலத்தின் துளசி கௌடா பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்
சென்னை: 30,000 மர கன்றுகளை நட்டு பராமரித்து வரும் துளசி கௌடா என்பவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.. யார் இந்த துளசி கௌடா?
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில், கடந்த 2020 - 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் நேற்றும் இன்றும் வழங்கப்பட்டன...

துளசி கௌடா
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை உரியவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். நேற்றைய தினம் வழங்கப்பட விருது விழாவில், அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தவர்தான் துளசி கௌடா.. காரணம், வெறுங்காலுடன் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்று கொண்டார்.. இவர் ஒரு பழங்குடி பெண்.. 72 வயதாகிறது.. இவரை "காட்டின் கலைக்களஞ்சியம்" என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.. கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தை சேர்ந்தவர்.. இயற்கை ஆர்வலர்..

மரக்கன்றுகள்
வனத்துறையில் தற்காலிக தன்னார்வலாக சேர்ந்துள்ளார்.. மரக்கன்று நடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று. தன்னுடைய 12வது வயதிலிருந்தே மரம் நடுவதை வழக்கமாக்கி கொண்டவர்.. நட்ட மரங்களை தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார்.. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை நடவு செய்திருக்கிறார்.. எத்தனை மரக்கன்றுகளை நட்டாலும், அவைகளின் சிறப்பு பற்றி துளசிக்கு நன்றாக தெரியுமாம்.

தாவரங்கள்
மூலிகை வகை தாவரங்கள் உட்பட அரிய வகை செடிகளின் பெயர்களைகூட அறிந்து வைத்திருக்கிறார்.. காடுகள் பற்றியும், காட்டின் தன்மை, விதைகளின் வீரியம் போன்றவைகள் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார்.. இதையெல்லாம் கேள்விப்பட்டு, துளசியின் ஆர்வத்தையும் அறிவையும் பார்த்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்களே ஆச்சரியப்பட்டு போகிறார்களாம்.. 72 வயது ஆகிவிட்டதே என்று ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு கொண்டேயிருக்கிறார்..

விருப்பம்
அதுமட்டுமல்ல, இந்த மரக்கன்றுகளை இளைய தலைமுறையும் நட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.. அதற்காகவே, இன்றைய இளைஞர்களுக்கு காடுகள், தாவரங்கள் குறித்த பாடங்களை கற்று தருகிறார் துளசி.. அந்த வகையில்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறுவதற்காக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது மேடைக்கு செல்லும்முன், அங்கு உட்கார்ந்திருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு வணக்கம் சொல்கிறார்..

செருப்பு
மேடையேறி விருதை பெறும்போதுதான் அனைவரும் ஒன்றை கவனித்தனர்... நாட்டின் உயரிய விருதை வாங்க வரும் துளிசி கௌடா, செருப்பு போடாமல் வந்திருக்கிறார்.. இவ்வளவு எளிமையா என்று அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள்... ஏழ்மை நிலையிலும் அடுத்த தலைமுறையினருக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகைசெய்த துளசி கௌடாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications