ஆசியம்மாள் வகித்த பதவியில் சத்தியபிரியா IPS.. ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அதிகாரி.. யார் இவர்?
சென்னை: ஆசியம்மாள் வகித்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பதவியில் சத்தியபிரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனரான சத்திய பிரியா, தமிழக அரசால் ஜெயலலிதா ஆட்சியின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.. அவரது ஹிஸ்டரியை பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வரும் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சத்யபிரியா கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் வேலூர் டிஎஸ்பியாக பணிக்குச் சேர்ந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சேலம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்தார். அதன்பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சிப் பள்ளி காஞ்சிபுரம் சரகங்களில் பணிபுரிந்தார்.
சத்தியபிரியா சூடான் ஐ.நா அமைதிப் படையில் சேர விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பான ஐ.நா அமைதிப்படை தேர்வில் 2010-11ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு சத்யபிரியா திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றியபோது, சூடானுக்கான ஐ.நா அமைதிப் படையில் சேருவதற்கு உள்துறை அமைச்சகம் சத்தியபிரியாவுக்கு அழைப்பு அனுப்பியது.

அஇதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று சூடானுக்கான ஐ.நா அமைதிப் படையில் பணியாற்ற 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார் சத்யபிரியா. அவர் அங்கு பணி முடித்த பின்னர் 2015 மார்ச் மாதம் தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.
ஆனால் தமிழக அரசோ, உரிய ஒப்புதல் இல்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறி சத்தியபிரியாவை சஸ்பென்ட் செய்தது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் சத்தியபிரியா முறையீடு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய உள்துறை அமைச்சகம், சத்தியபிரியா சஸ்பென்ட் செய்யப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

சத்தியபிரியா, தமிழக அரசால் பழிவாங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் தமிழக காவல்துறை பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். காவல்துறையில் சத்தியபிரியாவின் மெச்சத்தக்க பணியைப் பாராட்டி 2020ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் டி.ஐ.ஜி-யாக பணியாற்றிய சத்தியபிரியா, இந்தாண்டு ஜனவரி மாதம் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருச்சி மாநகர ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்சி மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் சத்தியபிரியா ஐபிஎஸ் தான் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் தான் தற்போது அவர் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப் பிரிவு ஆருத்ரா நிதி மோசடி வழக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்த பிரிவுக்கு ஐ.ஜியாக சத்தியபிரியா நியமிக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications