Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியிடம் வீடியோ கால்.. அடுத்த நொடியே வழக்கறிஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்.. விக்கித்து போன சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடியோ கால் பேசி முடித்ததுமே, வழக்கறிஞர் செய்த காரியம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. என்ன நடந்தது?

சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்.. 28 வயதாகிறது.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.. இவர் நந்தினி என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார்.. நந்தினியும் சதீஷை உயிருக்கு உயிராக விரும்பினார். 2 ஆண்டுகளாக இருவருமே காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

Chennai Arumbakkam

கோயம்பேடு: கல்யாணம் ஆகி ஒருசில நாட்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தினமும் தகராறும், சண்டையும் வெடித்தது.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த நந்தினி, கோயம்பேட்டில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத சதீஷ், மனைவிக்கு போனை போட்டு உடனே சமாதானம் செய்தார். ஆனால், நந்தினியின் கோபம் தீரவில்லை.. பிறகு மீண்டும் மீண்டும் நந்தினியை தொடர்புகொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபடியே இருந்தார் சதீஷ்.. அப்போதும் மனம் இளகாத நந்தினி, ஒருபோதும் குடும்பம் நடத்த வரவே முடியாது என்ற சதீஷிடம் திடமாக சொல்லிவிட்டார்.

தற்கொலை: இதனால், கடந்த சில நாட்களாகவே மனவேதனையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் மறுபடியும் மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வராததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொன்னார்.. பிறகு அடுத்த செகண்டே போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த நந்தினியும், குடும்பத்தினரும் சதீஷின் வீட்டிற்கு சென்றார்கள்.. அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.. பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான், சதீஷ் தூக்கில் சடலமாக தொங்கியிருப்பதை கண்டு கதறினார்கள்.

அதிர்ச்சி: இதுதொடர்பாக தகவலறிந்து அரும்பாக்கம் போலீசாரும் விரைந்து வந்தனர்.. சதீஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.. வழக்கறிஞர் ஒருவர் வீடியோ கால் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் சென்னையில் நீதிமன்ற தரப்பினரிடம் அதிர்ச்சியை தந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+