Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுக்கு சங்கரை தீவிரவாதி போல கைது செய்யும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது?- நயினார் நாகேந்திரன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: “கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Why Arrest a Journalist Like a Terrorist Asks Nainar Nagendran After Savukku Shankar s Arrest

தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரில், சவுக்கு சங்கர் அவதூறாக பேசி தன்னை மிரட்டி, 2 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக குற்றம்சாட்டினார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுக்கு சங்கரை அவரது வீட்டில் இருந்தபோது கைது செய்தனர்.

கைது நடவடிக்கையில், போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாசிச திமுக அரசு. கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கைச் சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?

ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+