விருப்பமே இல்லாதவரை.. பிடித்து இழுத்து வைத்து.. ஏங்க இப்படி? சிஎஸ்கேவிற்கு போன வார்னிங்! அப்போ தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கியமான வீரர் ஒருவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து அதிரடியாக ஆடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. 5 போட்டிகளில் வென்றுள்ளது.

இதனால் புள்ளிகள் பட்டியலில் தற்போது சிஎஸ்கே அணி 2ம் இடத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் வீரர் ஒருவருக்கு எதிராக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிப்படி ஆட்டத்தின் ஒரு பகுதியில் வீரரை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக முதல் இன்னிங்சில் ஒரு அணி பேட்டிங் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை தூக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை கொண்டு வர முடியும். உதாரணமாக சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ருத்துராஜ் நன்றாக ஆடி 100 அடிக்கிறார்.
அவர் சிறப்பாக ஆடினாலும் கூட பவுலிங் செய்ய மாட்டார். இரண்டாவது இன்னிங்சில் அவர் பவுலிங் செய்யாமல் பீல்டிங் மட்டும் செய்வதில் பலன் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதில் கூடுதல் ஒரு முழுநேர பவுலர் களமிறக்கப்பட்டார் என்றால் எப்படி இருக்கும். இந்த வசதியைத்தான் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வந்துள்ளது.

இனி எல்லா அணிகளும் 11 வீரர்களை கொண்ட அணி + 1 வீரரை மனதில் வைத்து இருக்கும். பேட்டிங் செய்யும் போது கூடுதலாக அதிக பேட்ஸ்மேன் கொண்ட ஒரு அணி இருக்கும். அதன்பின் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஒரு பவுலரை சேர்க்கும்.
அதுவே முதலில் பவுலிங் செய்கிறார்கள் என்றால் ஒரு முழு நேர பவுலரை கூடுதலாக களமிறக்கி ஆடுவார்கள். அதன்பின் பேட்டிங்கில் அவரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வருவார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடரே மிகவும் வித்தியாசமே இருக்க போகிறது. அந்த வகையில் சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்ததில் சிஎஸ்கே அணி 4 இம்பாக்ட் வீரர்களை மனதில் வைத்துள்ளது. டாஸை பொறுத்து இதில் ஒருவரை சிஎஸ்கே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கேவில் ஆகாஷ் சிங் பவுலிங் இம்பாக் வீரராக பயன்படுத்தப்பட்டு வருகிறார். பேட்டிங் செய்யும் போது அவருக்கு பதிலாக அம்பதி ராயுடு களமிறக்கப்படுகிறார்.
ஆனால் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications