திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?
சென்னை: திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தூத்துக்குடி எம்பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை.. அதேநேரம் எழும்பூர் தொகுதியில் போட்டியிட திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.. ஏன் அவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவில்லை.. எப்படி தமிழன் பிரசன்னாவிற்கு மட்டும் சீட் கிடைத்தது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைபேட்டி நிலவுகிறது.விஜய்யின் வருகை தான் இதில் திமுக, அதிமுகவிற்கு உள்ள பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதன் கூட்டணி அமைத்து வலுவாக போட்டியிடுகின்றன அதிமுக, திமுக.. எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

ஆனால் ஆளுங்கட்சியான திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் பட்டியலில், பல பிரபலங்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் சோன முத்தா பேச்சா என்ற ரீதியில் சீட் கிடைக்காதவர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்... அதேநேர தமிழன் பிரசன்னா உள்பட பலருக்கும் சீட் கிடைத்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
திவ்யா சத்யராஜ்
கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனத்தைத் தவிர்க்கவும், ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து, தனிச் சின்னம் கேட்டார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.. இதனால் கமல்ஹாசன் மட்டுமின்றி அவரது கட்சியினர் யாருமே போட்டியிடவில்லை.. தேர்தலையே கமல்ஹாசன் புறக்கணித்துவிட்டார்
கனிமொழி
தூத்துக்குடி தொகுதி எம்பியாக இருக்கும் கனிமொழி அவர்களை மாநில அரசியலுக்கு அழைத்து வருவதில் தலைமைக்குச் சில தயக்கங்கள் இருக்கலாம். டெல்லியில் திமுக-வின் குரலாக அவர் நீடிப்பதே அவசியம் எனக் கருதப்பட்டிருக்கலாம். சென்னை மேயர் பிரியாவைப் பொறுத்தவரை, மேயர் பதவிக்காலம் முடியும் வரை அவரை மாற்ற வேண்டாம் என தலைமை முடிவெடுத்திருக்கலாம்.
வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, போஸ் வெங்கட்,
ஊடகங்களில் திமுக-விற்காகக் கடுமையாகப் வாதாடும் ராஜீவ் காந்தி மற்றும் போஸ் வெங்கட் போன்றோருக்கு சீட் கிடைக்கும் எனப் பலரும் நம்பினர். அதேபோல் தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவிக்கும் சீட் வழங்கப்படவில்லை. ஆனால், கட்சி நிர்வாகத்தில் அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மாவட்டச் செயலாளர்களின் அழுத்தம் இவர்களை ஓரங்கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
'தமிழன் பிரசன்னா 'ஸ்பெஷல்' வாய்ப்பு
எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல. அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாம். கடந்த சில ஆண்டுகளாகச் சமூக வலைதளங்களிலும், நேரடி விவாதங்களிலும் திமுகவின் கொள்கைகளை ஆணித்தரமாகப் பதிவு செய்தவர். குறிப்பாக 'உதயநிதி ஸ்டாலின்' மீதான விமர்சனங்களுக்கு முன்நின்று பதில் கொடுத்தவர் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
தலித் அரசியல் பலம்
ழும்பூர் ஒரு தனித்தொகுதி . அங்குப் படித்த, ஆளுமைமிக்க ஒரு தலித் இளைஞரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை விரும்பியது. விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைக் கவர்வதற்கும் இவரது ஆளுமை உதவும் எனக் கணிக்கப்பட்ட்டிருக்கிறது. அதேநேரம் பரந்தாமன் எம்எல்ஏவிற்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது என்பது குறித்தும் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சிலர் தகல்களை கூறி வருகிறார்கள். அதன்படி பரந்தாமனுக்கும் முக்கியமான சென்னை அமைச்சருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் அவருக்குச் சீட் கிடைக்காமல் போனதற்கு ஒரு பின்னணியாக கூறுகிறார் சவுக்கு சங்கர். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்த 164 வேட்பாளர் பட்டியலில் திமுக தலைமை மிகவும் கவனமாகச் செயல்பட்டுள்ளது. சிட்டிங் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அதே நேரத்தில், ஊடகங்களில் பிரபலமான முகங்களையும் விடக் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து வந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் சீட் கிடைத்துள்ளது. எனினும் சீட் கிடைக்காத திவ்யா சத்யராஜ்., கனிமொழி, மேயர் பிரியா, போஸ்வெங்கட், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோரை கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை














Click it and Unblock the Notifications