Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு போஸ்ட் செய்தார்? ராகுல் பற்றிய போஸ்ட் ஏன்? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை; ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து தனிப்பட்ட கருத்து கிடையாது. எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு அப்படி போஸ்ட் செய்தார். அவர் தனியாக எதுவும் போஸ்ட் செய்யவில்லை, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இரண்டு நாட்களுக்கு முன் திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் செல்லூ ராஜூ, ராகுல் காந்தி ஒரு ஹோட்டலில் அமர்ந்து மக்களுடன் சாப்பிட்டபடி அவர்களுக்கு எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தார்.

Why did Sellur raju post about Rahul Gandhi What is AIADMK planning

இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவித்தார். அதன்பின் இந்த பதிவையும் நீக்கினார்.

இந்த நிலையில்தான் செல்லூர் ராஜுவின் செயல் பற்றி மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து தனிப்பட்ட கருத்து கிடையாது. எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு அப்படி போஸ்ட் செய்தார். அவர் தனியாக எதுவும் போஸ்ட் செய்யவில்லை. செல்லூர் ராஜு முன்பு விஜய்யை வாழ்த்தினார். அதுவும் கூட எடப்பாடி சொல்லித்தான் நடந்தது. ஜெயலலிதா ஊழலை வைத்து படம் எடுத்த விஜயை செல்லூர் ராஜு அவரை வாழ்த்துகிறார். கடைசியில் லோக்கல் சண்டை காரணமாக ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து நீக்கப்பட்டது.

லோக்கல் அளவில் நிர்வாகிகள் இடையே சண்டை வந்ததால் அந்த பதிவை செல்லூர் ராஜு நீக்கிவிட்டார். தலைமை சொல்லித்தான் இப்படி எல்லாம் செய்கிறார். காங்கிரஸ் நம்மகிட்ட வருகிறார்கள்.. 30 சீட் கொடுப்போம் என்றெல்லாம் கதை விடுவார். இதன் நம்பி செல்லூர் ராஜு போஸ்ட் செய்துள்ளார்.

எடப்பாடி எப்படி காங்கிரஸ் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது அதிமுக. சுனில் கனகூலு எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வரும் என்றெல்லாம் வரும் என்று சொன்னார்கள்.

அது எதுவுமே நடக்கவில்லை. இப்போது அதிமுக பரிதாபமாக போய்விட்டது. அதிமுகவின் பகல் கனவு எல்லாம் தோற்றுவிட்டது. கூட்டணியை ஸ்டாலின் திறம்பட கையாண்டு வருகிறார். அவர் கூட்டணியை உடைக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார். அது வெற்றி கூட்டணி. ஆர் கே நகரை தவிர வேறு எங்கும் தோல்வி அடையாத அணி.

. எடப்பாடி எவ்வளவு முயன்றும் கூட அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லையே. எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் இறங்கி வரவில்லையே. 2026ல் கூட்டணியை உறுதி செய்துதான் 2024ல் காங்கிரஸ் - திமுக கூட்டணியே மேற்கொள்ளப்பட்டது.

2024ல் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்.. 2026ல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறியே ஸ்டாலின் கூட்டணியை இறுதி செய்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் கலைஞரை விட வலிமையானவர் ஸ்டாலின். கலைஞரை விட ஸ்டாலின் நல்ல திட்டம் போட கூடியவர், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+