அடித்து சொன்ன அமித் ஷா! குறுக்கே வந்த முருகன்.. 2 மணி நேரம் பேசுனேனே! ஆ! அண்ணாமலை இப்படி சொல்றாரே
சென்னை: பாஜகவில் அண்ணாமலை கொடுத்த ஸ்டேட்மென்ட்.. அதன்பின் அமித் ஷா கொடுத்த ஸ்டேட்மென்ட்.. அதன்பின் எல் முருகன் பேசியது.. அதற்கு தற்போது அண்ணாமலை கொடுத்த பதில் என்று மாறி மாறி விளக்கங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில் இப்போதே பாஜகவின் கூட்டணி விவகாரங்கள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளன.
சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை பேசியதாக கூறப்படும் இந்த விஷயங்கள்தான் அரசியல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதிமுக கூட்டணிக்கு எதிராக அவர் சொன்ன விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அந்த கூட்டத்தில் அண்ணாமலை என்னதான் பேசினார்?

சர்ச்சை
அந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

குனிய முடியாது
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அமித் ஷா சந்திப்பு
இதையடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

கூட்டணி
இதையடுத்து பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்த போது, அதிமுக -பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தான் சலசலப்புகள் உள்ளன. கூட்டணி பற்றி நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. இதை தேவையின்றி சர்ச்சையாக்கி உள்ளனர். மாநில தலைவர் என்று முறையில் அண்ணாமலை சில விஷயங்களை பேசி இருக்கிறார். இதை பற்றி சர்ச்சை செய்ய வேண்டியது இல்லை என்று எல் முருகன் விளக்கி உள்ளார்.

திருப்பம்
இந்த நிலையில்தான், திடீர் திருப்பமாக அண்ணாமலை இதற்கு வேறு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது.

அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம். 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ளோம் என்று அமித் ஷா, எல் முருகன் கூறிய நிலையில் அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம், அரசியலில் இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது, என்று அண்ணாமலை கூட்டணி எதிராக பேசியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications