கலைந்து போன ஆசை.. எடப்பாடி கண் முன் நிற்கும் "அக்னி பரீட்சை".. சூழ்நிலை மோசமாம்.. என்னாச்சு?
சென்னை: எடப்பாடி ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும் என்று ஆசையாக இருந்தார். அந்த ஆசை எல்லாம் பேராசையாகி.. நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அதனால் இப்போது லோக்சபா தேர்தலில் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். அவரின் இந்த பேட்டி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: எடப்பாடி இப்போது இஸ்லாமியர்களை ஆதரித்து பேசுகிறார். இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் அதெல்லாம் கூட்டணியில் மீண்டும் இணையும் போது நடக்காது. பாஜக உடன் மீண்டும் எடப்பாடி கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை வரலாம் என்று நான் நினைக்கிறன்.
அதனால்தான் இப்போது எடப்பாடி பாஜகவை பற்றி பேச கூடாது. பாஜகவை எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். மீண்டும் கூட்டணி தேவைப்பட்டால் டெல்லி பாஜக எடப்பாடியை அணுகும். கூட்டணி வேண்டும் என்றால்.. அண்ணாமலையை ஆப் செய்யும் . இல்லையென்றால் கூட்டணி இல்லாமல் செல்லும். பெரும்பாலும் இவர்கள் கூட்டணி வைப்பார்கள் என்றே தோன்றுகிறது.
அண்ணாமலை எதுவும் சொல்ல முடியாது: கூட்டணி விஷயங்களில் அண்ணாமலை எதுவும் சொல்ல முடியாது. வேண்டும் என்றால் எடப்பாடி சொன்னால் அதை அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை.
கூட்டணி மீண்டும் சேருவார்கள் என்றே நினைக்கிறேன். லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சனை மீண்டும் சூடு பிடிக்கும். அதுவரை இஸ்லாமியர்களை காக்கா பிடிக்க எடப்பாடி முயற்சி செய்வார். இஸ்லாமியர்களை வைத்து திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த, சமயங்களில் திமுக கூட்டணி கட்சிகளை உடைத்து வெளியே கொண்டு வர அவர் முயற்சி செய்வார்.
எடப்பாடி பிளான் என்ன?: இரண்டு கட்சியிலும் நிர்வாகிகள் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இவர்கள் தனி தனியாக கூட்டணி அமைத்தாலும் வெற்றிபெறும் அளவிற்கு கூட்டணி இருக்காது. அதிமுக தனியாக கூட்டணி அமைத்தாலும் அது வெற்றிபெறும் கூட்டணியாக இருக்காது. பாஜகவிற்கு அதேதான். அவர்கள் பாமக, தொடங்கி பலருடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி கிடைக்காது. எனவே இரண்டு கூட்டணியிலும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சிறுபான்மையினர் வாக்குகள் வலிமையாக திமுக பக்கம் செல்கிறது. திமுகவின் இந்த கப்பல் வலிமையாக இருக்கிறது. இந்த கப்பலில் ஓட்டை போட வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். சிறுபான்மையினர் வாக்குகளை உடைக்க வேண்டும் என்று அவர் திட்டம் போட்டுள்ளார். இதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்.
பல நாள் இருக்கிறது: எடப்பாடி ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும் என்று ஆசையாக இருந்தார். அந்த ஆசை எல்லாம் பேராசையாகி.. நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அதனால் இப்போது லோக்சபா தேர்தலில் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். எப்படியாவது அதிக இடங்களில் அவர் லோக்சபா தேர்தலில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக கூட நிலைமை மாறும்.

இந்த லோக்சபா தேர்தல் அவருக்கு அக்னிபரீட்சை போல இருக்கும். அதனால் எடப்பாடி பழனிசாமி இதில் எப்படியவாது வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications