ரயிலின் கடைசி பெட்டியில் ஏன் X இருக்கு? இது தெரியாம போச்சே! பெட்டிகளின் கலரில் பின்னணியில் சீக்ரெட்
சென்னை: இன்று ரயில்வேயின் தேவை உயர்ந்து கொண்டே வருகிறது.. நம்முடைய இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யப் பலருக்கும் பிடித்தமான ஒன்று ரயில் பயணம்.. பிளாட்பாரத்தில் ரயில் வந்து நிற்கும் போது, அதில் இருக்கும் பெட்டிகளின் பலவிதமான நிறங்களை கவனித்திருப்பீர்கள்.. சிலர் இவை வெறும் அலங்காரத்திற்காக அடிக்கப்பட்ட பெயிண்ட் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், உண்மையில் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப ரகசியமும், பாதுகாப்பு அம்சமும் ஒளிந்து கொண்டுள்ளது. அதை பற்றி தெரிந்துவைத்து கொள்வதும் அவசியமாகிறது.
நாம் பல ஆண்டுகளாக பார்த்து பழகிய அந்த நீல நிறப் பெட்டிகள் இப்போது மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.. முதலில் நாம் அதிகம் பார்த்த நீல நிறப் பெட்டிகள் ICF அதாவது Integral Coach Factory வகையைச் சேர்ந்தவையாகும்..

ரயில் பெட்டிகள் நிறங்கள்
இவை சென்னையில் உள்ள பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுபவை.. இரும்புப் பொருட்களால் செய்யப்படும் இந்தப் பெட்டிகள் 70 முதல் 140 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.
ஆனால், விபத்து காலங்களில் இந்தப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், இப்போது இந்த பெட்டிகளின் உற்பத்தியை ரயில்வே குறைத்து வருகிறது.. இதற்கு மாற்றாகத்தான் அந்த தகதகக்கும் ரெட் கலர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.. இதனை LHB அதாவது Linke Hofmann Busch என்று சொல்வார்கள்..
துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்படும் இந்தப் பெட்டிகள் விபத்து நடந்தாலும் ஒன்றன் மேல் ஒன்று ஏறாது.. ராஜ்தானி, சதாப்தி போன்ற அதிவேக ரயில்களில் இந்தச் சிகப்பு பெட்டிகளையே நீங்கள் அதிகம் பார்க்க முடியும்.
பச்சை நிற பெட்டி
அதேபோல பச்சை கலர் பெட்டிகளையும் கவனித்திருக்கலாம்.. இவை பெரும்பாலும் கரீப் ரத் போன்ற ஏழை எளிய மக்களுக்கான ஏசி ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.. குறைந்த கட்டணத்தில் ஏசி வசதி கொண்ட பெட்டி என்பதைத் தூரத்திலிருந்தே அடையாளம் காண இப்படியான பச்சை நிறம் உதவுகிறது.
சமீபகாலமாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு கலரிலும் ஜொலிக்கும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் வேகத்தையும், நவீனத்தையும் பறைசாற்றுகின்றன.. இதில் வெள்ளை நிறம் தூய்மையையும், ஆரஞ்சு நிறம் இந்தியாவின் வீரத்தையும் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது..
வெள்ளை நிற கோடுகள் ஏன்
அதுமட்டுமல்ல, சில பெட்டிகளில் ஜன்னலுக்கு மேலே மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சாய்வான கோடுகள் வரையப்பட்டிருக்கும்.. இது அந்தப் பெட்டி முன்பதிவு இல்லாத பெட்டி என்பதை, கல்வியறிவு பெறாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ள வைக்கப்பட்ட குறியீடாகும்..
ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய X குறியீடு இருக்கும்.. இது அந்த ரயில் முழுமையாகச் சென்றுவிட்டது என்பதைக் குறிக்கும் சிக்னல் ஆகும்.
அதேபோல நீல நிறப் பெட்டிகளில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி என்பதை உணர்த்துகிறது.. இப்படி ஒவ்வொரு நிறமும், கோடும் ஒரு மொழியாகவே ரயிலில் செயல்படுகின்றன.. இனிமே நீங்கள் பயணம் செய்யும் போது, வெறும் பெட்டியை பார்த்தே அது எந்த வகை ரயில், எவ்வளவு வேகம் செல்லும், அது பாதுகாப்பானதா என்பதை நீங்களே ஈஸியாக கணித்துவிடலாம்...!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications