ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தேவைப்படுகிறது? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
சென்னை: ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தின் எதிர்காலத்தையே இந்த ஆயுள் காப்பீடுகள் தீர்மானிப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தனி மனித நிதியில் இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. சம்பாதித்த பணத்தைப் பெருக்குதல் - முதலீடு
2. சம்பாதித்த பணத்தை காத்தல் - காப்பீடு
காப்பீட்டில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவை
ஆயுள் காப்பீடு என்றால் என்ன?
இதில், ஆயுள் காப்பீடு என்பது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் திடீரென இறந்துவிட்டால், காப்பீடு செய்யப்பட்ட தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். குடும்பம் அவர் உயிரோடிருந்தால், எவ்வாறு நிதி பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ, அவ்வாறே குடும்பத்தின் நிதி நிலைமையை காக்கப்படும்.
ஆயுள் காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. சம்பாதிக்கும் நபர் இல்லாத பட்சத்திலும், குடும்பத்தினை காக்கிறது.
ஆயுள் காப்பீடு பின்வரும் விதங்களில் உதவும்
குடும்பத்தின் உறுப்பினர்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு உதவும் பணம்
குடும்பத்தில் ஏதேனும் கடன் இருப்பின், அதனை அடைக்க உதவும்
குடும்பத்தில் குழந்தைகள் படிப்பினைத் தொடரவும், மேல்படிப்பு படிக்கவும், திருமணம் செய்யவும் உதவும்.
ஏற்கனவே, குடும்பத்தின் எதிர்காலத்திற்காக செய்த முதலீடுகளை நடுவில் எடுக்காமல் தொடர உதவும். இதன் மூலம், முதலீடுகளை வளர்க்க முடியும். முதலீடுகளை நடுவில் எடுப்பதென்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.
- குடும்பத்தின் நிதி நிலைமையைக் காக்கிறது
- குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் உயிரோடு இருந்தால், எத்தகைய வாழ்க்கைத் தரம் இருந்திருக்குமோ, அதே வாழ்க்கைத் தரத்தை வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் பெற உதவுகிறது
- குறைந்த காப்பீட்டுத் தவணைத் தொகைக்கு , மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. உதாரணமாக, 1 கோடி ரூபாய் காப்பட்டுத் தொகைக்கு, காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டத்தில், வருடம் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் தவணை செலுத்தினால் போதுமானது.
- குடும்பத் தலைவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மன நிம்மதியை அளிக்கிறது. இது வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் போன்றது. வாழ்க்கை என்னும் பயணத்தில், ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், குடும்பத்தை காக்கும்.
- குடும்பத்தின் எதிர்காலத்தை காக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications