Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம்.. பிடிஆர் அறிவிப்பு.. உதயநிதி ஸ்டாலினின் திட்டம் என்ன?

சென்னையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. எங்கு இந்த விளையாட்டு மையம் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் 3வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20 ம் தேதியான இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து பிடிஆர் உரையை வாசிக்கையில், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

கலைஞர் நூலகம்

கலைஞர் நூலகம்

மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குடிமைப்பணி பயிற்சி

குடிமைப்பணி பயிற்சி

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது" என்றார்,

தொடக்க பள்ளிகள்

தொடக்க பள்ளிகள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிடிஆர் கூறினார்.

சென்னையில் அமைகிறது

சென்னையில் அமைகிறது

அத்துடன் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அறிவிப்பு வெளிடப்பட்டிருக்கிறது. இதற்கான கோரிக்கையை உதயநிதிதான் எழுப்பி இருப்பார் என்று கூறப்படுகிறது.

எப்படி அமையப்போகுது

எப்படி அமையப்போகுது

சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு எழுந்துள்ளது. சென்னையில் எங்கு அமைக்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை. சென்னையின் மையப்பகுதிகளில் சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. அதேநேரம் சர்வதேச விளையாட்டு மையம் புதிதாக அமைக்கப்படவிருப்பது மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் இந்த திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+