எடப்பாடியை "போட்டு கொடுத்த" சசிகலா?.. அதென்ன "ஹார்டுடிஸ்க்".. செம துணிச்சல்தான்.. கலங்கும் கூடாரம்
எடப்பாடி பழனிசாமி குறித்து அதிகாரிகளிடம் சசிகலா என்ன சொன்னார்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகளும், தலைவலிகளும் சசிகலாவால் கூடிக் கொண்டே போவதாக கூறப்படுகிறது.. எனினும் அனைத்தையும் சமாளிக்கும் முயற்சியல் எடப்பாடி மும்முரமாக இறங்கி உள்ளாராம்..!
ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக வலம் வருபவர்கள் செய்யும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போன்றவைகள் அனைத்தும், டாக்குமெண்ட்களாக, ஹார்ட் டிஸ்க்குகளாக கொடநாடு பங்களாவில்தான் பாதுகாத்து வந்தனராம்.
அதேபோல, யார் மீது எந்த புகார்கள், பிரச்சனைகள் வருகிறதோ, அப்போது இந்த தகவல்கள்தான் உதவியாகவும் இருந்து வந்துள்ளது.

இளவரசி, சுதாகரன்
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் கொடநாடு பங்களா... சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ள நிலையில், சென்னையில் பேசப்படாத எத்தனையோ அரசியல் விவகாரங்களை இந்த பங்களாவில்தான் பேசுவார்களாம்.. அவை அனைத்துமே சிசிடிவியில் பதிவாகி இருந்தது என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சிடி, டாக்குமெண்ட்கள், ஹார்ட் டிஸ்குக்கள் ஒரே நாளில் காணாமல் போயுள்ளது.. போதாக்குறைக்கு கொலையும் நடந்துள்ளது.

சசிகலா
இவைகள் தொடர்பாகதான், சசிகலாவிடமும் விசாரணை ஆரம்பமானது.. ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் சொன்னாரே, அதுபோலவே, தெரியாது, ஞாபகம் இல்லை என்றே பெருமளவு கேள்விகளுக்கு பதில் சொல்லியதால், அதிகாரிகள் கையை பிசைந்ததாக தெரிகிறது.. எனினும், அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறப்பட்டது.. முதல்நாள் விசாரணையின்போதே, சசிகலா என்ன பதில் சொல்ல போகிறாரோ என்ற கிலியில் எடப்பாடி தரப்பு இருப்பதாக சொல்லப்பட்டது..

எடப்பாடி பழனிசாமி
காரணம், விசாரணையில், சசிகலா அளிக்கும் பதில்களை அடிப்படையாக கொண்டு எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற யூகங்கள் பரபரத்து வரும் நிலையில், இதுவும் டென்ஷனை எகிற வைத்தது.. எல்லாவற்றிற்கும் மேலாக, எடப்பாடி பழனிசாமி பற்றி, ஏதோ வெயிட்டான மெசேஜ் அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்ததாக 2 நாட்களுக்குமுன்பு தகவல்களும் கசிந்தன.

எடப்பாடிக்கு கலக்கம்
இந்நிலையில், மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. சசிகலாவிடம் இரண்டு நாள் விசாரணையை தனிப்படை போலீஸார் முடித்துக் கொண்ட நிலையில், விசாரணையில் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை அறிய முயற்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, அதிமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையில் உயரதிகாரியாக இருந்தவரின் உதவியை அவர் நாடியிருக்கிறார்.

பங்களா
மேலும், தனது ஆட்சியின் போது முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அணுகியிருக்கிறார். இரண்டு தரப்பிலுமிருந்து அவருக்கு கிடைத்த தகவல் ஒரே மாதிரி இருந்தது. அதாவது, கொடநாடு சம்பவத்தின் போது ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியில்லாமல் அந்த பங்களாவில் நுழைய யாருக்கும் துணிச்சல் வந்திருக்காது என்று சசிகலா சொல்லியிருப்பதாக அந்த அதிகாரிகள் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்
அதுமட்டுமல்லாமல், இந்த விசாரணையின் இறுதிக் கட்டத்தில் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள் ; அதற்கான திட்டமிடலும் போலீசாரிடம் இருக்கிறது. ஆனால், பதட்டமடைகிற அளவுக்கு ஏதுமில்லை என்பதையும் அவர்கள் சொல்லியுள்ளனர். இந்த நிலையில், எடப்பாடியை தொடர்பு கொண்டு சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து சேலம் இளங்கோவன் விசாரிக்க, அதிகாரிகள் தரப்பிலிருந்து தனக்கு கிடைத்த தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இனி என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications