ஆஹா.. கடைசியில் ஈபிஎஸ் கேட்டது கிடைக்கலையா? எதுவுமே அங்க செல்லாதாமே? கேசிபி பிடித்த ‘நச்’ பாயிண்ட்!
ஈபிஎஸ் கேட்டது உச்ச நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார் கேசி பழனிச்சாமி.
சென்னை : இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது குறித்த எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை, எனவே அவர் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றாலும் அவருக்கு சாதகமான முடிவு வராது என பாயிண்டை முன்வைத்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை நாடி, பொதுக்குழு முடிவுகளின் படி தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் பிளான்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை நாட உள்ளது ஈபிஎஸ் தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகலை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பினர் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவே இல்லையே
அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதனை பதிவேற்றம் செய்யும். பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஈபிஎஸ் அணி ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக எந்தவொரு உத்தரவையும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கவில்லை, எனவே, ஈபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கோரினாலும், தேர்தல் ஆணையம் ஏற்காது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பதவி?
அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி இது தொடர்பாக பேசுகையில், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவில், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை வேட்பாளருக்கு வழங்க, பொதுக்குழு மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டதே தவிர, இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்பது குறித்த எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

இப்போது முடிவு வராது
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவிலும், இதுகுறித்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எங்களால் முடிவெடுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இன்றளவும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து எடுப்பதுதான் அதிமுக முடிவு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யார் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றாலும், இப்போது வேறு தேர்தல் எதுவும் வராததால் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தான் இதனை பரிசீலிப்பது பற்றிச் சிந்திப்பார்கள்.

இந்த பதில் தான்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்குச் சென்று முறையிட்டால், நீங்கள் தான் உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பொதுக்குழு முடிவுகளை வெப்சைட்டில் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள், அதில் எங்கள் பதிலையும் நாங்கள் தெரிவித்து விட்டோம். அதில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு, சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி உத்தரவை ஏற்றுக்கொள்வதா, இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதா என்பதை மட்டும்தான் என தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் தரப்புக்கு பதில் கொடுக்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications