ஆளுநர் ரவி "யூ டர்ன்".. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திமுக கிரீன் சிக்னல்? ரெடியாக நிற்கும் பாஜக!
சென்னை: அரசியலில் யாரும் எதிரியும் அல்ல.. நண்பனும் அல்ல என்பார்கள்.. அப்படி அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் பாஜகவும், திமுகவும் நெருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கும் பாஜக.. திமுகவிற்கு Friedn Request கொடுக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக இந்த முறை தீவிரமாக தயாராகி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த சில மாநில கட்சிகளும் ஏற்கும் வகையில் பொது வேட்பாளரை களமிறக்க பாஜக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வருகின்றன.
இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்

பாஜகவிற்கு ஆதரவு தேவை
இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன. ஆனால் இந்த முறை பாஜக கூட்டணிக்கு 48.8 சதவிகித வாக்குகளே உள்ளன. எனவே பாஜக நிறுத்தும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க மாநிலங்களில் பலமாக இருக்கும் ஆளும் கட்சிகளின் ஆதரவு தேவை. இதில் முதலில் இருப்பது என்று பார்த்தால்.. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகதான்.

பொதுவேட்பாளர் வெங்கையா நாயுடு
இந்த நிலையில் திமுக ஏற்கும் வகையில் அல்லது டிஆர்எஸ், தெலுங்கு தேசம் போன்ற மாநில ஆளும் கட்சிகள் ஏற்கும் வகையில் வேட்பாளர் ஒருவரை பாஜக நிறுத்த வேண்டும். இதற்கு தோதானவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுதான் என்று கூறப்படுகிறது. திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இந்த நிலையில்தான் இவரை நிறுத்தினால் திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை பெறலாம் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்.

சமீபத்தில் சந்திப்பு
சமீபத்தில் கூட வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் கண்டிப்பாக இந்த சந்திப்பிற்கு பின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் ரேஸில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்தான் அவரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் ஆதரவை பெறும் வகையில் அவர் சந்திப்பை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றே செய்தி
அதே சமயம் திமுகவும் அவ்வளவு எளிதாக பாஜக வேட்பாளரை ஆதரித்துவிடாது. வெங்கையா நாயுடுவை ஆதரிக்க வேண்டும் என்றால் திமுகவிற்கு சாதகமான முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதன்படி ஆளுநர் ரவியை திரும்ப பெறுதல், நீட் விலக்கு மசோதாவை ஏற்றுக்கொண்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தல், 7 பேர் விடுதலையில் ஆளுநர் சாதகமான முடிவு எடுத்தல் போன்ற கோரிக்கைகளை பாஜக தரப்பிற்கு ஆளும் திமுக வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது பற்றி நேற்றே நாம் விளக்கமாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
Recommended Video

சமாதானம்
இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். இத்தனை நாள் பொறுமை காத்துவிட்டு தற்போது சரியாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக ஆளுநர் ரவி மசோதாவை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் இந்த மூவ் ஆளும் திமுக தரப்பிற்கு கொடுக்கப்பட்ட வெள்ளை கொடியோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட்டில் உங்களுக்கு சாதகமான முடிவு எடுத்துள்ளோம்.. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எங்களுக்கு சாதகமாக முடிவை நீங்கள் எடுங்கள் என்று பாஜக இப்போதே தூது விடுவது போல தோன்றி உள்ளது.

வெள்ளை கொடி
திமுகவின் ஆதரவை வேண்டி, பாஜக ரெடியாகி நிற்கும் நிலையில், திமுக இதை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இப்போது மசோதா குடியரசுத் தலைவருக்கு போய்விட்டது. இனி திமுகவை ஆதரிக்கும் (எதிர்க்கட்சிகள் கொண்டு வரும்) குடையரசுத் தலைவர் தேர்வானால் அவரே மசோதாவை நிறைவேற்றிவிடுவார். பாஜகவின் தயவை திமுகவை நம்பி இருக்க வேண்டியது இல்லை என்பதால், திமுக பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?











Click it and Unblock the Notifications