Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யின் முதல் மாநாட்டை.. கேரவன் உள்ளே இருந்து பார்த்த 'அந்த' நடிகை! திருச்சி சூர்யா ஒபன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், எனவே தனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்றும் அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்த திருச்சி சூர்யா, விஜய்யை சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

குறிப்பாக, விஜய்யின் முதல் மாநாடு நடந்தபோது அங்கு கிட்டதட்ட 10 கேரவன்கள் வந்திருந்ததாகவும், அதில் அவர் திருமணத்தை மீறி உறவில் இருந்த நடிகை இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்போம், அவர்களை உயர் பதவியில் அமர்த்துவோம் என்று விஜய் கூறியிருந்தார். இதெல்லாம் அவர் மேடையில் கொடுத்த பில்டப். இப்போது பாருங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று.

Trichy Surya Siva latest speech

சங்கீதா விவாகரத்து

தமிழக வெற்றிக் கழகத்தில், வெற்றி என்றால் விஜய் என்று அவர் பேசி வந்தார். ஆனால், இப்போது பாருங்கள் விவாகரத்து என்றால் விஜய் என்று ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் என்னை சொன்னால் தமிழ்நாட்டையே சொன்ன மாதிரி என்று பேசி வந்தார். இப்போது, சங்கீதா வந்து விவாகரத்து செய்வதாக கூறுகிறார். அப்படியெனில் அவர் தமிழ்நாட்டையே விவாகரத்து செய்வதாக ஆகிவிடுமா?

சங்கீதாவை தாக்கிய விஜய்

பொதுவாக அரசியல் தலைவர்களை உதயநிதி ஸ்டாலினை, ஸ்டாலினை, கருணாநிதியை விமர்சிக்கிறார்கள். ஆனால், யாருடைய மனைவிகளாவது வெளியில் வந்து இதுபோன்று குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்களா? பெண்களுக்கு தழிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று விஜய் பேசுகிறார். ஆனால், கட்டிய மனைவிக்கே விஜய் பாதுகாப்பு கொடுக்கவில்லை. விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில், விஜய் தன்னை தாக்கினார் என்று சங்கீதா கூறியிருக்கிறார்.

நடிகை குறித்து பேசாமல் எப்படி இருப்பது?

சங்கீதா கொடுத்த மனுவில் விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதற்காகத்தான் விலகுகிறேன் என்று கூறவில்லை. கடந்த 2021ல் நடிகையுடன் விஜய் தொடர்பில் இருப்பதை தான் கண்டுபிடித்ததாகவும், இந்த விஷயத்தால்தான் விலகுகிறேன் என்று பேசியிருக்கிறார். அப்படியெனில் நடிகை குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?

நான் திருச்சியில் இருந்தாலும், வாரம் தோறும் தவறாமல் சென்னைக்கு வந்து பப்களுக்கு செல்வேன். அங்கு அந்த நடிகை செய்த விஷயங்கள் அனைத்தும் எனக்கு தெரியும்.

நடிகைக்காக மனைவியை அடித்த விஜய்

விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டில், திருமணத்தை மீறிய உறவு குறித்து கேட்கும்போதெல்லாம் பொருளாதார ரீதியாக என்னை முடக்கினார் என்று கூறியிருக்கிறார். ஆனால், விஜய் ரூ.1000 உரிமைத்தொகை குறித்து விமர்சித்திருக்கிறார். இதெல்லாம் எப்படி நியாயம்? அந்த நடிக்கைக்கா தன்னை அடித்தார் என்று சங்கீதா கூறியிருக்கிறார் இவர் எப்படி பெண்ணுரிமை குறித்து பேசுவார்?

விரிச்சுவல் வாரியர்ஸ்

மறுபுறம், விஜயின் விரிச்சுவல் வாரியர்ஸ், சங்கீதாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். விஜய் கட்சி தொடங்கி உடன் நான் கேட்து சங்கீதாவைதான். எங்கே அவர் என்று கேட்டேன். பலரும் சங்கீதாவை மறந்துவிட்டார்கள். ஆடியோ வெளியீட்டுக்கு கூட சங்கீதாவை அழைத்துவரவில்லை என்று நான் கேட்டிருந்தேன். மோடியை காங்கிரஸ் உட்பட பலகட்சிகளும் இந்த விஷயத்தில் விமர்சித்திருந்தன. கட்டிண பொண்டாடியை கூட வைத்து பார்த்துக்கொள்ளவில்லை, இவர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்? என்று கேள்வி எழுப்பியிருந்தன. அதையேத்தான் நான் விஜய்யை பார்த்து கேட்க விரும்புகிறேன்.

விஜய்யின் முதல் மாநாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஏராளமான கேரவன்கள் வந்திருந்தன. குறைந்தது 10 கேரவன்கள் இருக்கும். இதில் ஒன்றில் அந்த நடிகை இருந்தார். ஒரே கேரவன் கொண்டு வந்தால் டவுட் வரும் என்பதற்காக அத்தனை கேரவன்கள் வந்திருந்தன” என்று பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+