Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் இணைகிறாரா தமாகா யுவராஜா? திடீர் ராஜினாமாவுக்கு பின்னணி என்ன? அவரே கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமாகா இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள யுவராஜா, அதிமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பை யுவராஜா ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TMC GK Vasan Yuvaraja


லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், இந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் எந்தப் பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமாகா தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக, பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசி இருந்தனர். தமாகா தலைவர்கள் பலரும் அதிமுகவுடன் கூட்டணி செல்வதையே விரும்பியதாக கூறப்பட்டது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் அந்த சந்திப்பு குறித்து யுவராஜா விளக்கம் அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா கட்சி அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம், அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.

தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.கவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார் யுவராஜா.

தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில் நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் யுவராஜா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் யுவராஜா.

அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜா, ராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய இளைஞரணி தலைவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக 117 புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கட்சி கட்டமைப்பை பலப்படுத்த ஜி.கே.வாசன் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்டகாலம் வகித்து வந்த தமாகா இளைஞரணி பதவியை யுவராஜா ராஜினாமா செய்திருந்தாலும், கட்சியில் உறுப்பினராகவே தொடர்கிறார். எனினும், சிறிது காலத்தில் அவர் அதிமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் உலவி வருகின்றன.

இதுதொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள யுவராஜா, இளைஞரணி தலைவர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேனே தவிர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறக்கவில்லை. நீண்ட காலம் இளைஞரணி தலைவராக இருந்துவிட்ட காரணத்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பேன் எனக் கூறி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். யுவராஜா, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். காங்கிரஸ் சார்பில் 2011 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பதவியை திடீரென ராஜினாமா செய்தார் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா! ஜிகே வாசன் அதிர்ச்சி!


ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய நிலையில், யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும் யுவராஜா தமாகாவிலேயே தொடர்ந்து பயணித்தார்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா , 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார். ஆனாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+