கொடுங்கையூரில் கொடூரம்.. அத்தையை உறவுக்கு அழைத்த தம்பி மகன்.. வர மறுத்ததால் கொலை செய்த பயங்கரம்
சென்னை: சென்னை கொடுங்கையூரில் வீட்டில் அத்தையை உறவுக்கு அழைத்து அவர் வர மறுத்து கூச்சலிட்டதால் அவரை தம்பி மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை கொடுங்கையூரில் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (47). இவரது கணவர் அன்புடன் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்பு வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற போது அவருடைய மகன், மகள் யாரும் வீட்டில் இல்லை. வேளாண்கண்ணி மட்டுமே தனியாக இருந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் மரியா லாரன்ஸ் மாலை வீட்டிற்கு வந்ததும் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மரியா அக்கம்பக்கத்தில் இருப்போரை அழைத்தார். அவர்கள் வேளாங்கண்ணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொடுங்கையூர் தனிப்படை போலீஸார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் யார் என உறவினர்களிடம் அடையாளம் காணப்பட்ட போது அவர்களில் ஒருவர் இறந்த பெண்ணின் தம்பி மகன் அகஸ்டின் அருண் (21) என்றும் மற்றொருவர் அவருடைய நண்பர் சாலமன் (22) என்பது தெரியவந்தது.
இருவரும் அத்தை வீட்டிற்கு டீ குடிப்பதற்காக சென்றனர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அகஸ்டின் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு திடீரென காம உணர்வு அதிகமானது. அந்த நேரம் பார்த்து என் நண்பருடன் அத்தை வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் மட்டும் வீட்டில் இருந்ததை அறிந்தேன்.
மேலும் எனக்கு அதிக உணர்வு ஏற்பட்டதால் அத்தையிடம் உல்லாசமாக இருக்கலாம் என கேட்டேன். உடனே அத்தை அதை கேட்டதும் என்னை திட்டினார். நான் உன் அத்தை என்னிடம் இப்படியெல்லாம் பேசலாமா என திட்டியுள்ளார். இதனால் எனது தாய், தந்தையிடம் அவர் சொல்லிவிடுவரோ என எனக்கு பயம் ஏற்பட்டது.
மேலும் அவருடன் உடலுறவு கொண்டால் என்னை அவர் சிக்க வைக்க மாட்டார் என்பதற்காக அவரை வலுக்கட்டாயமாக அடைய நினைத்தேன். அப்போது அவர் உறவுக்கு மறுத்தார். மேலும் கத்தி கூச்சல் போட்டார். இதனால் நான் சிக்கி கொள்வேனோ என்ற அச்சத்தில் அவரது தலையை சுவற்றில் மோதினேன், உடனே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். இதையடுத்து என் நண்பருடன் தப்பித்தேன். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications