இவ்வளவு அபராதம் விதிப்பாங்களா? உங்க கிட்ட ஆதார் அட்டை இருக்கா.. அப்போ மறக்காம இதை முதல்ல படிங்க!
சென்னை: ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் போது தவறுதலான விவரங்களை கொடுத்தால் உங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இப்படி பல சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் ஆகிவிட்டது. ஆதார் கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் அவசியம் ஆகிவிட்டதால், ஆதார் அட்டையில் இனி மாற்றங்கள் செய்தால் அது மற்ற அட்டைகளில் எதிரொலிக்கும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறதாம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறதாம். தற்போது இருக்கும் முறைப்படி ஆதார் அட்டையில் விலாசம் மாற்றினால் அது மட்டுமே மாறும்.
ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் விலாசம் மாற்ற வேண்டும் என்றால் தனி தனியாக செல்ல வேண்டும். இதற்காக தனி தனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இது பெரிய அலைச்சலை கொடுக்கும் வேலை ஆகும். ஒவ்வொரு முறையும் விலாசம் மாறும் போது இந்த அலுவலகங்களுக்கு எல்லாம் சென்று விலாசம் மாற்றுவது இயலாத காரியம்.
ஆனால் இனி ஆதாரில் விலாசத்தை மாற்றினால் அனைத்து அட்டைகளிலும் விலாசம் மாறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது.

அபராதம்:ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் போது தவறுதலான விவரங்களை கொடுத்தால் உங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று ஆதார் UIDAI அமைப்பு தெரிவித்து உள்ளது.
1. நீங்கள் ஆதாரில் விவரங்களை மாற்ற ஒரு அப்ளிகேஷனை நிரப்ப வேண்டும்.
2. இதில் தவறுதலாக நிரப்பினால் உங்களுக்கு 1000 ரூபாய் வர அபராதம் விதிக்கப்படும். தவறுதலாக நிரப்பி, அந்த விவரம் ஆதார் அட்டையில் ஏற்றப்பட்டால் மீண்டும் விவரங்களை மாற்ற 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
3. அதுவே ஆதார் தனியார் சேவை மையம் இதே தவறை அவர்கள் பக்கம் இருந்து செய்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும்.
4. தேவையின்றி ஆதார் விவரங்களை மாற்றுவது உள்ளிட்ட ஏமாற்று வேலைகளை தடுப்பதற்காக இந்த அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
5. பொதுவாக ஆதார் சேவை மையங்களுக்கு ஒவ்வொரு சேவையிலும் 36 ரூபாயை UIDAI கொடுக்கிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் அடிக்கடி அப்டேட் செய்து ஏமாற்றி பணம் வசூலிக்க கூடாது என்பதால் இந்த அபராத முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
6. ஆதார் அட்டையில் விலாசம் மாற்ற மட்டுமே உள்ளூர் கெஸட் அதிகாரியின் கையெழுத்து உள்ள ஆவணம் தேவை. மற்றவற்றிற்கு அரசு ஆவண ஆதாரங்கள் தேவை ஆகும்.












Click it and Unblock the Notifications