டெல்லி டூ சென்னை விமானம்.. நடுவானில் அத்துமீறி அசிங்கமாக மாட்டிய பயணி.. மறக்க முடியாத பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது. தெரியாமல் கைப்பட்டுவிட்டதாக சமாளித்த ராஜேஷ், மீண்டும் மீண்டும் சில்மிஷம் செய்தாராம். இதனால் அந்த பெண் நடுவானில் கூச்சலிட்டதால், இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையமும், உள்நாட்டு விமான நிலையமும் ஒன்றாக அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல விமானங்கள் வந்து செல்கின்றன. அப்படித்தான் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் சம்பவம் நடந்த அன்று வந்து கொண்டு இருந்தது.

chennai flight delhi

தனியார் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதில் பயணித்த சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த 43 வயதாகும் ராஜேஷ் என்பவர் தனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தத.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி கூச்சலிட்டு, விமான பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் ராஜேசை அவர்கள் கடுமையாக எச்சரித்தனர். அதற்கு ராஜேஷ், தெரியாமல் கைபட்டு விட்டது என்று கூறி சமாளித்தாராம். ஆனால் அதன்பிறகும் ராஜேஷ் முன் இருக்கைக்குள் கையை விட்டு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமை விமானியிடம் விமான பணிப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் கொடுத்தார். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், தயாராக இருந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ராஜேசை வளைத்து பிடித்தார்கள். பின்னர் அவரை பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கு பாதிக்கப்பட்ட பெண் பயணி, ராஜேஷ் மீது முறைப்படி எழுத்து மூலமாக புகார் செய்தார். இதையடுத்து அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் ராஜேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த புகாரில் சென்னை இளைஞர் கைதாகி இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+