தனியார் கொரோனா பரிசோதனை மையங்களில் நடக்கும் மோசடி.. உஷார்.. கோவையில் சிக்கிய 4 டெஸ்ட் மையங்கள்
கோவை: இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இதை பயன்படுத்தி லாபம் பார்க்கும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பரிசோதனை மையங்களில் நடைபெறும் ஒரு நூதனமான முறைகேடு பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு பரிசோதனை அதிகமாக நடைபெறுகிறது என்று அரசு ஒரு சாதனையாக கூறி வருகிறது.
நேற்று மட்டும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 15,000 என்ற அளவுக்கு இருந்த பரிசோதனை அளவு இப்பொழுது தினமும் 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் என்று சென்று கொண்டு உள்ளது.

அதிக பரிசோதனை மையங்கள்
தமிழகத்தில் மொத்தமாக 95 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 49 பரிசோதனை மையங்கள் அரசு சார்பிலும் 46 பரிசோதனை மையங்கள் தனியார் சார்பில் இயங்கி வருகின்றன. இதில் தனியார் ஆய்வகங்களில்தான் முறைகேடுகள் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளன.

போலி கணக்கு
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக, பரிசோதனை செய்வது போல போலியாக கணக்கு காட்டி, காப்பீடு திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு ஆய்வகங்கள் முயற்சி செய்கின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள நான்கு தனியார் ஆய்வகங்களில் இதுபோன்ற மோசடி கண்டறியப்பட்டு அவை கொரோனா பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம்
போலி அடையாள அட்டைகளை வைத்து முறைகேடாக கணக்கு காட்டி இவ்வாறு மோசடி நடந்துள்ளது. கோவையிலுள்ள பிரபலமான 4 தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் காரணமாக பரிசோதனை அதிகமாக நடைபெற்றது என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் பரிசோதனை குறைவாக இருக்கும்.

உஷார்
அரசின் கருவூலத்திற்கு நஷ்டம் என்பது ஒருபக்கம் என்றால், போலியான புள்ளிவிவரத்தின் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் எதிரான போரில் நாம் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட கூடும். எனவே இதில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications