உக்கடம் மேம்பாலத்தில் இளைஞரின் கழுத்து, கைகளைப் பதம் பார்த்த மாஞ்சா நூல்.. 3 பேர் மீது வழக்குப் பதிவு
கோவை: கோவை மாவட்டம், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்டம்விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அறுத்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டம் விடுவதற்கு சிறுவர்கள், இளைஞர்கள் மாஞ்சா நூலைப் பயன்படுத்துவது வழக்கம். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அறுக்கும் தன்மையுடையது என்பதால் இந்த நூலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பதமாக இருக்கும் இந்த நூல் அறுத்தால் கடுமையான ஆழமான காயங்களை உண்டாக்கும். இந்த மாஞ்சா நூலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். எனவே, இந்த மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்டம்விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அறுத்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக். இவரும், இவரது மனைவியும் உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்தப் பாலத்தில் பட்டம் ஒன்று பறந்து வந்து பட்டத்தின் நூல் கார்த்திக்கின் கழுத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அப்போது, நிலை தடுமாறிய கார்த்தி உடனடியாக வாகனத்தை நிறுத்தி பட்டத்தின் நூலை எடுக்க முயன்றுள்ளார்.
அந்தப் பட்டத்தில் மாஞ்சா நூல் பயன்படுத்தப்பட்டிருந்ததால் பட்டத்தின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார் கார்த்திக். அவருக்கு விரல்களில் இரண்டு இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது காவல் துறை உதவி எண் 100க்கு அழைத்து இதுதடொர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கார்த்திக் கடந்த திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த ரியாஸ், அசிம் பைசல் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோர் பட்டம் விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, ஆபத்து குறித்தும் தெரிந்தே மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கரும்புக்கடை காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல் துறையினர் சாப்ரில் மூன்று இளைஞர்களுக்கும் போலீஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications