அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?... பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் விளக்கம்
கோவை: அதிமுகவின் ஓராண்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
பாஜக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்கள் 24, 25-ம் தேதிகளில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகாரில், அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தொகுதிக்கு 50 கோடி.. பதுக்கி வச்சு காத்திட்டிருக்கு அதிமுகவும், பாஜகவும்.. அழகிரி பகீர் தகவல்
பாஜக தலைவர் அமித் ஷா ஓராண்டுக்கு முன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஓராண்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார் .
மேலும், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டு கொண்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் முரளிதரராவ் கூறினார்.