அதிக தொகுதிகளில் பாஜக நிச்சயமாக போட்டியிடும்.. டெல்லி தலைமை முடிவு என்ன? வானதி சீனிவாசன் அப்டேட்!
கோவை: கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டதை விடவும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று கூறிய வானதி சீனிவாசன், எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை சொல்கிறதோ அங்கு களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் பாஜகவை 25 தொகுதிகளுக்குள் நிறுத்தினால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஒருவேளை பாஜக 40 தொகுதிகளில் போட்டியிட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக உருவாகும்.

பாஜக எதிர்பார்ப்பு
இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் இம்முறை கொங்கு மண்டலத்தில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு தொகுதியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் பேட்டி
அதேபோல் கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ-வாகினார். ஆனால் இம்முறை வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தேர்தலுக்காக மட்டும் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல.
அதிக தொகுதிகளில் பாஜக
தேர்தல் நேரத்தில் கூடுதலாக வேலை செய்கிறோம். ஆண்டு முழுக்கவே மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். இந்த முறை கடந்த தேர்தலை விடவும் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும். எத்தனைத் தொகுதிகள் என்பதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு செய்வார்கள். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இன்னும் ஏராளமான கட்சிகள் இணையும்.
சகோதரர் அண்ணாமலை
நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தேசிய தலைமைத் தான் முடிவு செய்யும். அதேபோல் தேசிய மகளிர் அணி தலைவராக தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்து வருகிறேன். மேலும், ஒரு சகோதரியாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications