அதிக தொகுதிகளில் பாஜக நிச்சயமாக போட்டியிடும்.. டெல்லி தலைமை முடிவு என்ன? வானதி சீனிவாசன் அப்டேட்!
கோவை: கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டதை விடவும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று கூறிய வானதி சீனிவாசன், எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை சொல்கிறதோ அங்கு களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் பாஜகவை 25 தொகுதிகளுக்குள் நிறுத்தினால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஒருவேளை பாஜக 40 தொகுதிகளில் போட்டியிட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக உருவாகும்.

பாஜக எதிர்பார்ப்பு
இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் இம்முறை கொங்கு மண்டலத்தில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு தொகுதியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் பேட்டி
அதேபோல் கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ-வாகினார். ஆனால் இம்முறை வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தேர்தலுக்காக மட்டும் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல.
அதிக தொகுதிகளில் பாஜக
தேர்தல் நேரத்தில் கூடுதலாக வேலை செய்கிறோம். ஆண்டு முழுக்கவே மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். இந்த முறை கடந்த தேர்தலை விடவும் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும். எத்தனைத் தொகுதிகள் என்பதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு செய்வார்கள். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இன்னும் ஏராளமான கட்சிகள் இணையும்.
சகோதரர் அண்ணாமலை
நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தேசிய தலைமைத் தான் முடிவு செய்யும். அதேபோல் தேசிய மகளிர் அணி தலைவராக தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்து வருகிறேன். மேலும், ஒரு சகோதரியாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications