அதிக தொகுதிகளில் பாஜக நிச்சயமாக போட்டியிடும்.. டெல்லி தலைமை முடிவு என்ன? வானதி சீனிவாசன் அப்டேட்!
கோவை: கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டதை விடவும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று கூறிய வானதி சீனிவாசன், எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை சொல்கிறதோ அங்கு களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் பாஜகவை 25 தொகுதிகளுக்குள் நிறுத்தினால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஒருவேளை பாஜக 40 தொகுதிகளில் போட்டியிட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக உருவாகும்.

பாஜக எதிர்பார்ப்பு
இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் இம்முறை கொங்கு மண்டலத்தில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு தொகுதியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் பேட்டி
அதேபோல் கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ-வாகினார். ஆனால் இம்முறை வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தேர்தலுக்காக மட்டும் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல.
அதிக தொகுதிகளில் பாஜக
தேர்தல் நேரத்தில் கூடுதலாக வேலை செய்கிறோம். ஆண்டு முழுக்கவே மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். இந்த முறை கடந்த தேர்தலை விடவும் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும். எத்தனைத் தொகுதிகள் என்பதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு செய்வார்கள். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இன்னும் ஏராளமான கட்சிகள் இணையும்.
சகோதரர் அண்ணாமலை
நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தேசிய தலைமைத் தான் முடிவு செய்யும். அதேபோல் தேசிய மகளிர் அணி தலைவராக தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்து வருகிறேன். மேலும், ஒரு சகோதரியாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications