கோவையை திணறடித்த ஆட்டோ டிரைவர்கள்.. பைக் டாக்சிக்கு தடைகோரி சட்டையை கழற்றி செய்த சம்பவம்.. கைது
கோவை: கோவையில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி திடீரென்று இன்று ஆட்டோ டிரைவர்கள் கோவை - அவிநாசி சாலையில் சட்டையை கழற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் போராட்டத்தை ஆட்டோ டிரைவர்கள் கைவிடாததால் அவர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் கார், ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் பைக் டாக்சி பயன்பாடும் உள்ளது. இந்த பைக் டாக்சி சேவையால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனால் பைக் டாக்சி சேவையை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவையில் 200க்கும் அதிகமான ஆட்டோ டிரைவர்கள் திடீரென அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது பைக் டாக்சி சேவையால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் பதாகைகள் ஏந்தி, சட்டையை கழற்றி அரைநிர்வாணமாக கோவை அவிநாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் லட்சுமி மில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலையோரம் அமர்ந்து மறியல் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர். சாலையோரத்தில் ஆட்டோ டிரைவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆட்டோ டிரைவர்கள் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், ‛‛வெள்ளை நிற போர்டில் பைக் டாக்சி ஓட்டுகிறார்கள். எங்களையும் வெள்ளை நிற போர்டில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி தந்தால் பரவாயில்லை. ஆனால் எங்களுக்கு அனுமதியில்லை. நான் காலையில் இருந்து வெறும் 90 ரூபாய்க்கு மட்டுமே ஆட்டோ ஓட்டி உள்ளேன். நான் வாழவா? இல்லை சாகவா?. எனக்கு மருந்து தந்து கொன்று விடுங்கள். குடும்பத்தோடு சாக தயாராக இருக்கிறேன்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தால் இன்று மாலையில் கோவை - அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. முன்னதாக வாடகை டாக்ஸி போன்று இயக்கப்படும் பைக் டாக்ஸிக்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications