மணமக்கள் அதிமுக-பாஜக மாதிரி இருக்கக்கூடாது..ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்..உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
கோவையில் 81 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள் என்று கூறினார்.
கோவை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி கோவையில் 81 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள். ஒருத்தர் காலில் ஒருத்தர் விழாதீங்க. காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி கோவையில் 81 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் நியமித்தார். செந்தில் பாலாஜி கடுமையான உழைப்பாளி. மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட சீர்வரிசை பொருட்களை பார்த்து பார்த்து செந்தில் பாலாஜி செய்துள்ளார்.

அடிமையாக இருக்கக் கூடாது
மணமக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், யாருக்கும் யாரும் அடிமை கிடையாது. இங்கே நடந்திருப்பது சுயமரியாதை திருமணம். ஒருகாலத்தில் சுயமரியாதை திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. பெரியார் தான் சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று போராடினார். அதை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. சுயமரியாதை திருமணம் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் மணமக்கள் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருவர் அடிமையாக இருக்கக் கூடாது.

அதிமுகவும் பாஜகவும் மாதிரி
உங்களுடைய உரிமையை கேட்டு வாங்க வேண்டும். உதாரணத்திற்கு அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள். ஒருத்தர் காலில் ஒருத்தர் விழாதீங்க. காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும். தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம். ஆனால் ஒருபோதும் உங்கள் உரிமையை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள்.

தமிழ் பெயரை வையுங்கள்
இங்கு வந்துள்ள மணமக்களுக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். இங்க 81 திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன். உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள். கைத்தட்டிவிட்டு போய்விடக்கூடாது. சொல்லுற வார்த்தையை காப்பாற்ற வேண்டும். இந்த ஒரு உறுதிமொழியை மட்டும் உங்களிடம் கேட்கிறேன்.

5 லட்சம் கோடி கடனை விட்டு சென்றது
இந்தி மொழியை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கிறார்கள். தற்போது என்ன பெயர் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அர்த்தமும் புரியவில்லை. எனவே சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள். வீட்டில் அரசியல் பேசுங்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்குது.. இந்தியாவில் ஒன்றிய அரசு என்ன செய்கிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து நமது முதல்வர் 20 மாதங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தீட்டியிருக்கிறார். அது எப்படி உபயோகமாக இருக்கிறது. அதிமுக ஆட்சி நம்மிடம் அரசை விட்டுவிட்டு செல்லும் போது 5 லட்சம் கோடி கடனை விட்டு சென்றது. அதனை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.

நியாகப்படுத்த வேண்டியுள்ளது
நம்ம மக்களுக்கு மறதி அதிகம். அடிக்கடி நியாகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள். பிரச்சினை வந்தால் வெளியே வருவார்கள். தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வந்தார்கள். மிகப்பெரிய தோல்வியை பார்த்து விட்டார்கள்.

தேர்தல் இருக்கோ இல்லையோ
இனி அடுத்த 8 மாதங்களுக்கு வர மாட்டார்கள். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலின் போது தான் வருவார்கள். ஆனால் திமுகவினர் மட்டும் தான் தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறோம். தேர்தல் இருக்கோ இல்லையோ எப்போதும் திமுக மக்களுக்கு பணியாற்றும். எனவே நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications