Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை அமிர்தா பல்கலைக்கழகம் யானை நடமாட்டத்தை தடுக்க மின்வேலி அமைத்துள்ளது.. ஐகோர்ட்டில் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை எட்டிமடையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக நீண்ட மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது என்று ஐகோர்ட் அமைத்த நிபுணர்கள் குழு அறிக்கை தக்கல் செய்துள்ளது. யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறையின் நிபந்தனையை மீறி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோவை எட்டிமடையில் மாதா அமிர்தானந்தமயி மடம் அமைந்துள்ளது. இங்கு அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (Amrita Vishwa Vidyapeetham) என்ற பெயரில் மிகப்பெரிய நிக்ர்நிலை பல்கலைக்கழகமும் உள்ளது. இந்த வளாகத்தில் ஆசிரமம், தியான மையங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அடுத்தடுத்து மொத்தமாக உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மற்றும் மடம் ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

Coimbatore Amrita Vishwa Vidyapeetham University has erected an electric fence to prevent elephants

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உரிய அனுமதியில்லாமல் நீண்ட மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது. இதன்படியே நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

யானைகளை தடுக்க மின்வேலி

அதில் கூறுகையில், "அமிர்தானந்தமயி கல்வி நிலையத்தை கடந்த செப்டம்பர் 6-ந்தேதி அன்று ஆய்வு செய்தோம். அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகம், வனப்பகுதியை ஒட்டி 3 கிலோ மீட்டருக்கு யானை வராமல் இருக்க அகழி மற்றும் மின்சார வேலி அமைத்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க 3 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள் நுழைந்துள்ளன. மின்சார வேலி அமைத்துள்ளதால் யானைகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டு உள்ளன.

யானைக்கு பிடித்த வாழைத் தோப்பு

ஆனால், இந்த வேலியை அகற்றினால், நிலத்தின் அந்த எல்லை மீதான உரிமையை இழக்க நேரிடும் என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் அஞ்சுகிறது மேலும், அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தில் யானைக்களுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை கொண்ட வாழைத் தோப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மின்வேலி அமைப்பு

இந்த கல்வி நிலையம் கட்டும்போது, யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறை நிபந்தனை விதித்துள்ளது. தற்போது மின்வேலி அமைத்துள்ளது அந்த நிபந்தனையை மீறிய செயல் ஆகும். அதனால், அந்த மின்வேலியை அகற்ற வேண்டும்.

குடியிருப்பு கட்டியுள்ளது

அதுமட்டுமல்ல, வனப்பகுதி எல்லைக்கு மிக அருகில் ஊழியர்களின் குடியிருப்புகளை கல்வி நிறுவனம் கட்டியிருக்கிறது. இதுவும் நிபந்தனையை மீறிய செயல்தான். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+