Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை லாட்ஜ்ஜில் யாரிந்த பெண்? சுவற்றில் "பதிந்த" முகம்.. தட்டுத்தடுமாறி தறிகெட்ட கோயம்புத்தூர் ஜோடி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை லாட்ஜ்ஜில் தங்கியிருந்த ஜோடி யார்? அந்த இளம்பெண் யார்? என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாய் நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றில் இளம்பெண் அடித்துக் கொலைச் செய்யப்பட்து தொடர்பாக காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kovai lodge

கோவை அருகே உள்ளது சின்னியம்பாளையம்.. இங்குள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில், 2 நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் பெண்ணுடன் வந்துள்ளார்.. அன்றைய தினம் இங்கேயே தங்கிவிட்டு, நேற்றுமுன்தினம் விடிகாலை அந்த இளைஞர் மட்டும், லாட்ஜை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்..

சந்தேகம்: இளம்பெண் இல்லாமல், இந்த நபர் மட்டும் ரூமை விட்டு, அதுவும் விடிகாலையில், அவசரமாக வெளியேறியதை பார்த்து, லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது.. அதனால், உடனே அவர் தங்கியிருந்த ரூமுக்கு சென்று பார்த்தனர்.. அப்போது, அங்கே இளம்பெண், சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அந்த பெண்ணின் முகமெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

எனவே, இது குறித்து உடனடியாக பீளமேடு போலீசுக்கு, லாட்ஜ் ஊழியர்கள் தகவல் தந்தார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, லாட்ஜில் விசாரணை நடத்தி, அந்த பெண்ணின் சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், லாட்ஜில் வந்து தங்கிய நபரின் அடையாளங்களை வைத்து, அவரை போலீசார் தேடிவந்தனர்.

kovai lodge

லாட்ஜ் பெண்: அப்போதுதான், நேற்றைய தினம் அதே பகுதியில் இளைஞர் ஒருவர் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை கண்டனர். எனவே, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்தான், லாட்ஜில் பெண்ணை கொன்றவர் என்பதுதெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

இந்த இளைஞர் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவராம். இவரது பெயர் சரவணன்.. 29 வயதாகிறது.. இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கீதா.. 26 வயதாகிறது.. அவினாசி ரோட்டில், ஜிம்மில் டிரெயினராக வேலை பார்த்து வருகிறாராம்.

ரகசிய சந்திப்பு: கீதாவும், சரவணனும் தீவிரமாக காதலித்திருக்கிறார்கள்.. இவர்கள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை.. இதற்கு காரணம், கீதாவும், சரவணனும் அண்ணன், தங்கை உறவுமுறையாம்.. எனவே, இருவருமே வீட்டிற்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்... ஆனால் முறைப்படி திருமணத்தை பதிவு செய்யவில்லை.. எனினும், லாட்ஜ்களில் ரூம் எடுத்து ரகசியமாக தங்கி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால், கீதாவின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்து வந்துள்ளது.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியபோதும், இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த சண்டையில், கீதாவின் முகத்தில் ஓங்கி குத்தியதுடன், தலையை அங்கிருந்த சுவற்றிலேயே மோத செய்துள்ளார் சரவணன்.

விசாரணை: இதில் முகம் படுகாயமடைந்து, முழுமையாக நசுங்கிப்போய் கீதா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, சரவணனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணை கொலை செய்த மறுநாளே இளைஞர் கைதாகியிருப்பது, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+