துணை குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலையில் போதை ஆசாமிகள் செய்த அலப்பறை.. காவல் துறை வெளியிட்ட வீடியோ
கோவை: துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று கோவைக்கு வந்தார். குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸாரின் பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கோபமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பை மீறி துணை குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தை ஒருவழிப் பாதையில் ஓட்டி விபத்தை ஏற்றி ஏற்படுத்திய நபர், தான் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கும் வீடியோ காட்சிகளை கோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்க வரும் நேரத்தில், இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அதை மீறி இரு சக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த அனீஸ்ரகுமான், ஆசிக் என்பதும், அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது. போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கோவை போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இளைஞர்கள் உள்ளே நுழைந்ததாக பா.ஜ.கவினரும் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர காவல் துறையினரின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக போதை இளைஞர்கள் பாதுகாக்கபட்ட பகுதிக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மது போதை காரணமாகவே பாதுகாப்பு பகுதிக்குள் வந்ததாக விபத்தை ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவானது, காட்சிகள் எடிட் செய்யப்பட்டு பேசும் இளைஞரின் முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தங்களை காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்து விடுவார்கள் என்ற பயத்தில், ஒருவழிப் பாதையில் வேகமாக பயணித்ததாக அந்த வீடியோவில் பேசும் இளைஞர் கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாதுகாப்பு குறைபாடு காரணமில்லை, குடிபோதைதான் அத்துமீற காரணம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications