கோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி!
Recommended Video
கோவை: மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பி கனகராஜ் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இதனை விரும்பாத அண்ணன் வினோத் தனது தம்பியிடம் காதலை கைவிடுமாறு பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் தம்பி அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, இருவரும் சந்திப்பதை அறிந்த அண்ணன் வினோத், தம்பியையும் அவரது காதலியையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத்தொடர்ந்து கனகராஜின் காதலியான வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வர்ஷினி பிரியா உயிரிழந்தார்.
தம்பி கனகராஜை வெட்டிக்கொன்ற கையோடு வினோத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஆணவக்கொலையில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications